TN TRB முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – நாளை முதல் தேர்வு!
தமிழகத்தில் நாளை முதல் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு தொடங்க உள்ளது. இந்த வகையில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் முதுகலை ஆசிரியர் தேர்வு குறித்து செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார்.
ஆசிரியர் தேர்வு தொடக்கம்:
தமிழ்நாடு அரசின் கீழ் செயல்பட்டு வரும் தொடக்கக்கல்வி முதல் உயர்கல்வி வரையிலான நிறுவனங்களுக்கு ஆசிரியர்களையும், பேராசிரியர்களையும் தேர்ந்தெடுப்பதற்காக இவ்வாரியம் செயல்பட்டு வருகிறது. இந்த வகையில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குநர் நிலை-1, கணினி பயிற்றுநர்கள் நிலை-1-ல் இருக்கும் 2020-21 காலிப்பணியிடங்களுக்கான கணினி வழித்தேர்வு வருகிற 12-ந்தேதி முதல் 15-ந் தேதி வரையிலும், 16-ந்தேதி முதல் 20-ந் தேதி வரை தேர்வுகள் நடைபெற உள்ளன.
EPFO பயனர்கள் கவனத்திற்கு – கொரோனா நிவாரணம் ஒரு வருடத்திற்கு நீட்டிப்பு? முழு விவரம் இதோ!
இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள முதுகலை ஆசிரியர் தேர்வு குறித்து அம்மாவட்ட கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். இத்தேர்வு 9 தேர்வு மையங்களில் நடைபெற உள்ளன.
1.ஆலிம் முகமது சாலிக் பொறியியல் கல்லூரி – ஆவடி
2.லயோலா தொழில்நுட்பக் கல்லூரி – நசரத்பேட்டை
3.எஸ்.ஏ., பொறியியல் கல்லூரி – பூந்தமல்லி
4.செயின்ட் பீட்டர் பொறியியல் கல்லூரி-ஆவடி
5.செயின்ட் பீட்டர் உயர்கல்வி ஆராய்ச்சி கல்லூரி – ஆவடி
5.வேல்டெக் அறிவியல் தொழில்நுட்பக் கல்லூரி – ஆவடி
6.வேலம்மாள் பொறியியல் கல்லூரி – சூரப்பட்டு
7.வேலம்மாள் தொழில்நுட்பக் கல்லூரி – பஞ்செட்டி
8.பிரதியுஷா பொறியியல் கல்லூரி, அரண்வாயில் குப்பம்.
மேலும் காலை 9 மற்றும் மதியம் 2 மணிக்கு இரண்டு வேளைகளாக தேர்வு நடைபெறும். தேர்வர்கள் அரைமணி நேரத்திற்கு முன்னதாக தேர்வு மையத்திற்கு வர வேண்டும். இதனை தொடர்ந்து ஆதார், வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, பாஸ்போர்ட் இவற்றில் ஏதாவது ஒரு அடையாள அட்டை கொண்டு வர வேண்டும். தேர்வில், விலை உயர்ந்த பொருட்கள், மின்னணு சாதனங்கள் கொண்டு வர அனுமதி இல்லை என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.