‘குக் வித் கோமாளி’ மணிமேகலையை ஒரு வருடம் கழித்து பழிவாங்கிய ரக்சன் – வைரல் பதிவு!
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் யார் குக் என்றும், யார் கோமாளி என்றும் தெரியாத அளவிற்கு சில நேரங்களில் சம்பவங்கள் நடக்கும். அதன் படி இந்த வாரம் மணிமேகலையை ரக்சன் பழிவாங்கிய செயல் ஒன்று நடந்துள்ளது.
குக் விட் கோமாளி:
விஜய் டிவியின் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சி கடந்த மாதம் முதல் தொடங்கப்பட்டு மிகவும் பரபரப்பாக சென்று வருகிறது. பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு வார இறுதியில் அதே டைம் ஸ்லாட்டில் குக் வித் கோமாளி ஒளிபரப்பாவது அடுத்த விஷயம். இந்த முறை குக்குகளாக மனோபாலா, சந்தோஷ், அந்தோணி தாசன், அம்மு அபிராமி, ரோஷினி, கிரேஸ் கருணாஸ், சுருதிகா, வித்யூ லேகா போன்றவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ அஞ்சலி ஸ்வீட்டிக்கு திருமணம்? வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் ஷாக்!
கோமாளிகளாக முன்னர் இருந்தவர்களில் பாலா, சிவாங்கி, தங்கதுறை, சக்தி போன்றவர்கள் இருந்தாலும், முதல் வாரத்தில் புகழ் இல்லாமல் இருந்தார். ஆனால் 2ம் வாரத்தில் புகழ் வந்தார், ஆனால் சிவாங்கி வரவில்லை. ஆனால் 3ம் வாரத்தில் ரசிகர்களுக்கு டபுள் போனஸ் கிடைத்தது போல இரண்டு பேரும் கலந்து கொள்கின்றனர். இந்த பாசமலர்களின் காம்பினேஷன் சில வாரங்களாக ரசிகர்களால் மிஸ் செய்யப்பட்டது. தற்போது குக் வித் கோமாளி ஷூட்டிங் செட்டில் நடந்துள்ள விஷயம் ஒன்று பதிவிடப்பட்டுள்ளது.
மீண்டும் திறக்கப்படும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” புது கடை – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் உற்சாகம்!
அதாவது போன வருடம் மணிமேகலை அதிக உப்பு இருக்கும் உணவை ரக்சனிடம் கொடுத்து விடுவார். அதை தெரியாமல் சாப்பிட்டு பார்த்து விட்டு ரக்சன் படாத பாடு படுவார். அதற்கு பழிவாங்கும் விதமாக இந்த முறை ரக்சன் அதிக உப்பு இருக்கும் குழம்பை மணிமேகலைக்கு கொடுக்க,மணிமேகலை இதை எதிர்பார்க்காமல் குடித்து விடுகிறார். இதனை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். காருக்கு ஒரு வருடம் கழித்து பழிவாங்கிடீங்க ரக்சன் என்று பலரும் கமெண்ட் செய்து வைரலாகி வருகின்றனர்.