மீண்டும் திறக்கப்படும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” புது கடை – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் உற்சாகம்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் தற்போது அதிரடி திருப்பங்கள் வந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் கடை திறப்பார்களா மாட்டார்களா என்ற குழப்பம் ரசிகர் மத்தியில் எழுந்து வரும் நிலையில் அது குறித்த வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அண்ணன் தம்பிகள் கஷ்டப்பட்டு உழைப்பை எல்லாம் போட்டு பெரிதாக கடை ஒன்றை தொடங்குகின்றனர். ஆனால் கண்ணனை அடித்தவர்களை கதிர் அடித்ததால் இந்த குடும்பத்தை பலி வாங்க வேண்டும் என நினைத்து தனது அப்பா அரசு அலுவலராக இருப்பதை பயன்படுத்தி கடையை சீல் வைக்கிறார். அது பற்றிய விவரம் தெரியாமல் மூன்று நாட்களாக கடை வாசலில் மூர்த்தி ஜீவா காத்துக் கொண்டிருக்கின்றனர். அப்போது கண்ணனை அடித்தவர்கள் அவனை வழிமறைத்து உண்மையை சொல்கின்றனர்.
விஜய் டிவி ‘குக் வித் கோமாளி 3’ புகழ் செய்த காரியம் – ப்ரோமோ ரிலீஸ்! ரசிகர்கள் ஷாக்!
ஆனால் கண்ணன் ஐஸ்வர்யாவிடம் மட்டுமே உண்மையை சொல்லிவிட்டு அண்ணன்களிடம் சொல்லாமல் மறைகிறார். பின் ஐஸ்வர்யா இது பற்றிய உண்மையை கதிரிடம் சொல்ல, கதிர் கண்ணன் சேர்ந்து அடித்தவனை தேடுகின்றனர். ஆனால் கண்ணன் என்னால் தான் எல்லாம் என வருத்தப்படுகிறார். மறுபக்கம் மூர்த்தி என்ன தான் பிரச்சனை என கோவமாக கேட்க அவர் விவரத்தை சொல்கிறார். உடனே கோவப்பட்டு மூர்த்தி தர்ணாவில் ஈடுபடுகிறார். அப்போது அங்கே வந்த தனம் கடை தான் முக்கியம் என சொல்லி அவரும் கை குழந்தையுடன் அமர்கிறார்.
முதல் நாள் ஸ்கூலுக்கு போன “ராஜா ராணி 2” ஆல்யாவின் மகள் அய்லா – ட்ரெண்டான வீடியோ!
மேலும் நாளை வரும் எபிசோடுகளில் குடும்பத்தினர் அனைவரும் வந்து அமர்ந்து தர்ணாவில் ஈடுபட இருக்கின்றனர். அதனால் கோவப்பட்ட அதிகாரி கடையை இடிக்கப்போவதாக சொல்கிறார். இந்நிலையில் கடை மீண்டும் திறக்கப்படுமா? திறப்பு விழா நடைபெறுமா என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர். இந்நிலையில் இது குறித்த வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அதில் கதிர் முல்லை அழகாக நிகழ்ச்சிக்கு கிளம்புவது போல கிளம்பி இருக்கின்றனர். பின் புறம் கடை திறப்பு விழா போல அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோ மூலம் கடை திறப்பது உறுதியாகிவிட்டது.