மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை (பிப்.13) முழு ஊரடங்கு அமல்? புதிய தளர்வுகள் அறிவிப்பு!

0
மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை (பிப்.13) முழு ஊரடங்கு அமல்? புதிய தளர்வுகள் அறிவிப்பு!
மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை (பிப்.13) முழு ஊரடங்கு அமல்? புதிய தளர்வுகள் அறிவிப்பு!
மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை (பிப்.13) முழு ஊரடங்கு அமல்? புதிய தளர்வுகள் அறிவிப்பு!

கேரள மாநிலத்தில் கொரோனா பெருந்தொற்று காரணமாக பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை மாநில அரசு அமல்படுத்தியது. தற்போது கொரோனா தொற்று பரவல் குறைந்த நிலையில் பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது.

கூடுதல் தளர்வுகள்

இந்தியாவில் கொரோனா பரவலின் 2ம் அலையின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து தென்னாப்பிரிக்காவில் உருவான ஓமைக்ரான் தொற்று பல்வேறு மாநிலங்களில் பரவ தொடங்கியது. அத்துடன் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. அதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்த தேவைப்பட்டால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி கொள்ளலாம் என்று மத்திய அரசு பரிந்துரைத்துள்ளது. அதன்படி பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது.

IPL ரசிகர்களுக்கு ஷாக் அப்டேட் – லீக் போட்டிகளில் இருந்து விலகும் வெளிநாட்டு வீரர்கள்!

இதனை தொடர்ந்து கேரள மாநிலத்திலும் கொரோனா பரவல் அதிகரித்து வந்ததால் பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு அமல்படுத்தியது. அதன்படி இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு அமல்படுத்தியது. அதன்படி கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை அன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அடுத்த வாரம் தொற்று பரவலை பொறுத்து முடிவுகள் எடுக்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. இந்த நிலையில் தற்போது கொரோனா பரவல் சற்று குறைந்து வருகிறது.

TN TRB முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – நாளை முதல் தேர்வு!

அதனால் கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. இதில் குறிப்பாக வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு பிப்ரவரி 13ம் தேதி முதல் ரத்து செய்யப்பட்டுள்ளது. அத்துடன் வருகிற 28ம் தேதி முதல் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் முழுமையாக திறக்கப்பட்டு நேரடி முறையில் வழக்கம் போல் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது. அதுவரை 50% மாணவர்களை கொண்டு வகுப்புகளை நடத்த வேண்டும். இதையடுத்து பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வுக்கான தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் பாடங்களை விரைவாக முடிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!