தமிழகத்தில் வருகிற ஜூலை 11ம் தேதி பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
தமிழகத்தில் உள்ள நெல்லை நெல்லையப்பர் கோயிலில் ஆனிப் திருவிழாவின் முக்கிய அம்சமாக வரும் ஜூலை 11ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை குறித்த முக்கிய அறிவிப்பை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார்.
மாவட்ட ஆட்சியர் உத்தரவு:
தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோவிலில் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான ஆனி பெருந்திருவிழா ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவில் 9ம் நாள் விழாவில் 500 ஆண்டுகள் பழமையான, தமிழகத்தின் 3 வது பெரிய தேரான சுவாமி தேர் உள்ளிட்ட 5 தேரோட்டம் நடைபெறும்.இந்த தேரோட்டத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்து தேர் இழுப்பர். மேலும் கொரோனா தொற்று ஊரடங்கால் கோவில்கள் மூடப்பட்டுள்ள நிலையில், சிறப்புமிக்க ஆனித் தேரோட்ட திருவிழா நடத்துவதற்கு இரண்டு ஆண்டுகளாக அறநிலையத்துறை தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.
TN Job “FB Group” Join Now
நடப்பு ஆண்டு ஊரடங்கு கட்டுப்பாடுகள் விலக்கப்பட்டு உள்ளதால், நெல்லை நெல்லையப்பர் கோயிலில் ஆனிப் பெருந்திருவிழா விரைவில் கொண்டாடப்பட இருக்கிறது. இந்த திருவிழாவின் முக்கிய அம்சமாக வரும் ஜூலை 11ம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. இந்த திருவிழாவில் தொடக்க நிகழ்வான விநாயகர் திருவிழா கடந்த ஜூன் 15ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 5 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் தொடர்ந்து ராத்திரி மூவர் திருவிழா ஆறு நாட்கள் நடைபெற்று நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஆனித் தேரோட்டத்தை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் வரும் ஜூலை 11ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
கோபி ராதிகாவின் உறவை தெரிந்து கொண்ட பாக்கியா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!
இதுகுறித்து நெல்லை மாவட்ட நிர்வாகம் இன்று வெளியிட்ட அறிக்கையில், நெல்லையப்பர் கோவில் தேர் திருவிழா ஜூலை 11ம் தேதி நடைபெற இருப்பதை முன்னிட்டு அன்று மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும், அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும் மற்றும் நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் விடுமுறை (ஜூலை 11) நாளில் அரசு பொதுத் தேர்வுகள் ஏதும் இருந்தால், மாணவர்கள் மற்றும் தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள், அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறை பொருந்தாது என திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு உத்தரவு பிறப்பித்துள்ளார்.