கோபி ராதிகாவின் உறவை தெரிந்து கொண்ட பாக்கியா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியாவிடம் கோபியின் மனைவி பில் கட்டியதாக சொல்ல அதை கேட்டு பாக்கியா கோபியின் மனைவியை தேடி செல்கிறார். அப்போது கோபி கதவை திறந்து பார்க்க அங்கே கோபி ஒரு பெண் கையை பிடித்துக் கொண்டு இருப்பதை பார்த்து பாக்கியா மயக்கம் போட்டு விழுகிறார். பின் ராதிகா கோபியின் மனைவி என கூப்பிட்டதும் செல்ல அதை பார்த்து பாக்கியா அதிர்ச்சி அடைகிறார்.
பாக்கியலட்சுமி:
இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியாவிடம் நர்ஸ் அவருடைய மனைவி என வேறு ஒரு பெண் வந்திருப்பதாக சொல்ல பாக்கிய அதை கேட்டு அதிர்ச்சி அடைகிறார். அப்போது யார் அவர் என தேடி செல்ல ஆனால் ரூமிற்குள் நர்ஸ் விடாமல் இருக்கின்றனர். அப்போது பாக்கியா நர்ஸ் சொன்னது யாரை என குழப்பத்துடன் தேடி செல்கிறார். அப்போது பாக்கியா கோபி ரூமிற்கு உள்ள கதவை திறந்து பார்க்க அங்கே கோபி ராதிகாவின் கையை பிடித்து அமர்ந்து கொண்டிருக்கிறார்.
TN Job “FB Group” Join Now
ராதிகாவின் கையை பிடித்து நீ இல்லை என்றால் நான் செத்துருவேன் என சொல்ல பாக்கியா அதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். உன்னை தேடி எத்தனை முறை வந்தேன் ஆனால் நீ என்னை உதாசீனப்படுத்தி அனுப்பி வைத்துவிட்டாய் என சொல்கிறார். ராதிகா நீங்க குணமாகி வர வேண்டும் என சொல்லி வருத்தப்பட்டு பேசுகிறார். பின் பாக்கியா கோபியை வேறு பெண்ணுடன் பார்த்ததை நினைத்து பதட்டமாக வர அவருக்கு மயக்கம் ஏற்படுகிறது.
பாக்கியா மயக்கம் போட்டு விழ அப்போது ராதிகா கோபி ரூமில் இருந்து வெளியே வருகிறார். ஆனால் வெளியே பாக்கியாவை அவர் பார்க்காமல் செல்கிறார். அப்போது ராதிகாவின் அண்ணன் போன் செய்து என்ன நடக்கிறது கோபி எப்படி இருக்கிறார் என கேட்க நன்றாக இருப்பதாக ராதிகா சொல்கிறார். மறுபக்கம் வீட்டில் இனியா கோபிக்கு போன் செய்கிறார். ஆனால் கோபி போன் சுவிட்ச் ஆப்பில் இருக்கிறது. அப்போது தாத்தா நினைத்தேன் அவன் எங்கையாவது ஓடி இருப்பான் என சொல்ல, ஈஸ்வரி என் மகன் வருவான் என சொல்லி வருத்தப்பட்டு அழுகிறார்.
அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிப்பு – காலரா பரவல் எதிரொலி!
பின் பாக்கியா அமர்ந்திருக்க நர்ஸ் வந்து கோபியின் மனைவி யார் என கேட்கிறார். கோபியின் மனைவி என கூப்பிட்டதும் ராதிகா வந்து சொல்லுங்க என சொல்ல பாக்கியா அதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். பின் பாக்கியா ராதிகா நான் திருமணம் செய்ய இருப்பவர் என்னிடம் அவருடைய குடும்பத்தை பற்றி சொன்னது எல்லாம் பொய் என சொன்னதையும், கோபி குடித்துவிட்டு வந்து பாக்கியாவை பிடிக்கவில்லை என சொன்னது பற்றியும் சொல்லி வருத்தப்படுகிறார். ராதிகா நன்றாக இருக்க வேண்டும் என நினைத்து எப்படி எல்லாம் கவலைப்பட்டோம் என நினைத்து அதிர்ச்சி உடன் மருத்துவமனையை விட்டு வெளியே செல்கிறார்.