தமிழக அரசு ஊழியர்கள் கவனத்திற்கு – “எண்ம (டிஜிட்டல்) பலகை திட்டம்” அறிமுகம்!
தமிழகத்தில் அரசுத் துறைகளின் செயல்பாடுகளை டிஜிட்டல் முறையில் கண்காணிக்க “எண்ம பலகை திட்டத்தை” முதல்வர் ஸ்டாலின் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார்.
எண்ம பலகை திட்டம்:
தமிழக அரசின் கீழ் 42 துறைகள் செயல்பட்டு வருகிறது. இந்த துறைகளின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் படிப்படியாக மின்மயமாக்க “எண்ம பலகை திட்டம்” தொடங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து இருந்தார். அரசின் திட்டங்கள் வெளிப்படையாக மக்களுக்கு தெரிய வேண்டும் என்பதே இந்த திட்டத்தின் நோக்கம் ஆகும். இந்த திட்டம் மூலமாக அரசு மக்களுடன் நேரடி தொடர்பு கொண்டு அவர்களது கொள்கைகளை கேட்டறிந்து முதல்வருக்கு விரைவாக தகவல் அளிக்கப்பட்டு செயல்படுத்த ஏற்பாடு செய்யப்படும்.
Post Office இல் சேமிப்பு கணக்கு வைத்திருப்போர் கவனத்திற்கு – முழு விபரங்கள் இதோ!
பல்வேறு தரவுத்தள பயனாளிகளின் தகவல்களை ஒருங்கிணைந்த வகையில் காண்பதற்கும் இந்த அமைப்பு உதவியாக இருக்கும். தகவல் தொழில்நுட்பம் சார்ந்த ஆற்றல் மிக்க திறன் வாய்ந்த மையங்களை கொண்டுள்ள மாநிலமாக தமிழகம் இருக்கிறது. அதனால் இந்த திட்டம் அனைத்து மக்களுக்கும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் காரணமாக தகவல் தொழில்நுட்பவியல் துறை சார்பில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் டிச.25 முதல் ஜன.2 வரை பள்ளிகளுக்கு விடுமுறை – அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!
இது குறித்து அரசு துறை வட்டாரங்கள் கூறுகையில், அரசின் திட்டங்கள்,செயல்பாடுகள் அனைத்தும் தமிழகத்தில் உள்ள கடைக்கோடி கிராமங்களுக்கு சென்றுள்ளதா என்பதை கண்காணிக்கும் வகையில் இந்த எண்ம பலகை திட்டம் அமைந்திடும் என தெரிவித்துள்ளனர். மேலும் தமிழக அரசின் கொள்கை முடிவுகளுக்கான ஆதரவு அமைப்பு நடப்பு நிதி ஆண்டில் ரூபாய் 10 கோடியும் அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு ரூபாய் 5 கோடியும் இத்திட்டத்திற்கான ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.