தமிழகத்தில் டிச.25 முதல் ஜன.2 வரை பள்ளிகளுக்கு விடுமுறை – அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!

0
தமிழகத்தில் டிச.25 முதல் ஜன.2 வரை பள்ளிகளுக்கு விடுமுறை - அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!
தமிழகத்தில் டிச.25 முதல் ஜன.2 வரை பள்ளிகளுக்கு விடுமுறை - அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!
தமிழகத்தில் டிச.25 முதல் ஜன.2 வரை பள்ளிகளுக்கு விடுமுறை – அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!

தமிழகத்தில் வரும் டிசம்பர் 25ம் தேதி முதல் ஜனவரி மாதம் 2ம் தேதி வரை அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் அரையாண்டு விடுமுறை அளிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல் அளித்துள்ளார்.

பள்ளி விடுமுறை

நாடு முழுவதும் கொரோனா 2ம் அலைத்தொற்று பரவலுக்கு மத்தியில் தமிழகத்தில் கடந்த நவம்பர் மாதம் 1ம் தேதி முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் மீண்டுமாக திறக்கப்பட்டது. அந்த வகையில் கிட்டத்தட்ட 18 மாதங்கள் கழித்து முழுமையாக ஆரம்பிக்கப்பட்ட நேரடி வகுப்புகளில் மாணவர்கள் அனைவரும் உற்சாகமாக வருகை தந்து வருகின்றனர். இதற்கிடையில் கடந்த தீபாவளி தினத்தன்று பள்ளிகளுக்கு அளிக்கப்பட்ட விடுமுறைகள் கனமழை காரணமாக நீண்டு கொண்டே போனது.

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு சனிக்கிழமை விடுமுறை – ஆசிரியர்கள் நல கூட்டமைப்பு கோரிக்கை!

தொடர்ந்து இந்த கல்வியாண்டில் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு நடத்தப்படாது என்றும் பொது தேர்வு எழுதும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் திருப்புதல் தேர்வு நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதன் படி தற்போது தேர்வுகளும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தாமதமாக துவங்கப்பட்ட இந்த கல்வியாண்டில் தடைபட்ட பாடத்திட்டங்களை நடத்தி முடிப்பதில் பள்ளி ஆசிரியர்கள் ஆர்வம் செலுத்தி வந்தனர். அதனால் தமிழகத்தில் இந்த ஆண்டு அரையாண்டு விடுமுறை அளிக்கப்படாது என்று சில தகவல்கள் வெளியானது.

டிசம்பர் 24 முதல் ஜனவரி 20 வரை முழு ஊரடங்கு அமல் – அரசு உத்தரவு!

ஆனால் தமிழகம் முழுவதுமுள்ள பள்ளிகளுக்கு டிச.25ம் தேதி முதல் அரையாண்டு விடுமுறை துவங்குவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘தமிழகத்தில் உள்ள அனைத்து விதமான பள்ளிகளுக்கும் டிச.25 முதல் ஜன. 2ம் தேதி வரை அரையாண்டு விடுமுறை அளிக்கப்படும். மாணவர்கள் பேருந்து படிக்கட்டுகளில் பயணிப்பதை தடுக்கும் விதமாக பேருந்துகளில் கதவுகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த விடுமுறைக்கு பின்பு ஜன.3 முதல் பள்ளிகள் சுழற்சி முறையில் இல்லாமல் வழக்கமான முறையில் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!