சபரிமலை ஐயப்பன் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி – தேவஸ்தானம் அறிவிப்பு!
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் செப்டம்பர் 17ம் தேதி நடை திறக்கப்பட்டு தொடர்ந்து 5 நாட்கள் பக்தர்கள் தரிசனத்திற்கு தேவஸ்தான நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.
சபரிமலை நடைதிறப்பு:
கேரளாவில் கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்ட போதிலும் கொரோனா குறைந்தபாடில்லை. அதனை தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக சபரி மலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் வருகைக்கு அனுமதி மறுக்கப்பட்டது. தொற்று பரவி வரும் இந்த நேரத்தில் சபரிமலைக்கு வரும் பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் கூட்டம் கூடினால் கொரோனா தீவிரமாக பரவ வாய்ப்பு அதிகரிக்கும் என்பதால் பக்தர்கள் வருகை மறுக்கப்ட்டது.
கோவையில் செப்.16ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
அதன் பிறகு கொரோனா தொற்று ஓரளவு குறைந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் முதல் மாதாந்திர பூஜைகளுக்காக கோயில் நடை திறக்கப்பட்டு ஆன்லைன் முன்பதிவின் மூலம் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது புரட்டாசி மாத பூஜைக்காக செப்டம்பர் 16ம் தேதி மாலை 5 மணிக்கு சபரிமலை நடை மீண்டும் திறக்கபடவுள்ளது. செப்.17 முதல் பக்தர்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Instagram செயலியில் புதிய அம்சம் அறிமுகம் – பயனர்கள் கவனத்திற்கு!
புரட்டாசி மாத பூஜையானது செப்டம்பர் 21ம் தேதி வரை நடைபெறும் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. தினமும் 15,000 பக்தர்களுக்கு அனுமதி வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. மேலும் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திய சான்று மற்றும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.