Instagram செயலியில் புதிய அம்சம் அறிமுகம் – பயனர்கள் கவனத்திற்கு!
பல லட்சக்கணக்கான மக்களின் ஒரே விருப்பமாக இருந்து வரும் பிரபல சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் தற்போது பேவரைட்ஸ் என்ற புதிய அம்சத்தை அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பேவரைட்ஸ் அம்சம்
உலகளவில் உள்ள பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் ஒரு முக்கிய பொழுதுபோக்கு செயலியாக இன்ஸ்டாகிராம் இருந்து வருகிறது. ஏனென்றால் இன்ஸ்டாகிராம் செயலியை பல முன்னணி விளையாட்டு வீரர்கள், உலக பிரபலங்கள், சினிமா நட்சத்திரங்கள் என பலரும் பயன்படுத்துவதால் இது பலரது விருப்பமான பொழுதுபோக்கு அம்சமாக இருக்கிறது. அந்த வகையில் அவ்வப்போது அப்டேட்கள் மூலம் புதிய அம்சத்தை அறிமுகம் செய்து வரும் இன்ஸ்டாகிராம் செயலி தற்போது பேவரைட்ஸ் எனும் அம்சத்தை சோதனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
8ம் வகுப்பு வரை பள்ளிகளை மூட உத்தரவு – மாநில அரசு முடிவு!
இந்த பேவரைட்ஸ் அம்சம், சில பயனர்களின் பதிவுகளை மற்றவர்களை முன்பு பார்க்க அனுமதிக்கும். அதாவது ஒருவரது இன்ஸ்டாகிராம் பக்கம், குறிப்பிட்ட நபரின் பதிவுகளுக்கு முன்னுரிமை அளிக்கும். அந்த வகையில் ஒருவரது இன்ஸ்டாகிராம் பதிவுகளை, இனி தேர்தெடுக்கப்பட்ட நபர்களுடன் மட்டுமே பகிர்ந்து கொள்ள முடியும். அதாவது ஒரு பயனரின் நியூஸ் ஃபீடின் மேல் தோன்றும் புதிய போஸ்டுகளுக்கு கட்டுப்பாடுகளை அனுமதிக்கிறது.
நீலகிரி சுற்றுலா செல்வோர் கவனத்திற்கு – உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!
அந்த வகையில் தற்போது சோதனையில் ஈடுபடுத்தப்பட்டு வரும் பேவரைட்ஸ் அம்சம் உலகளாவில் வெளியாகுமா அல்லது இன்னும் சில மாற்றங்கள் ஏற்படுத்தப்படுமா என்பதை காத்திருந்து தான் தெரிந்துகொள்ள முடியும். ஆனால் இப்போது சில தகுதியுடைய பயனர்கள் மட்டுமே பேவரைட்ஸ் அம்சத்தை பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தகுதியானவர்கள் தங்கள் சுயவிவரப்பக்கத்தில் இருக்கும் மெனுவில் கொடுக்கப்பட்டுள்ள நெருங்கிய நண்பர்கள் பிரிவில், பேவரைட்ஸ் என்பதை தேர்ந்தெடுத்து பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.