திருப்பதி செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு!
ஆந்திர மாநில திருமலை திருப்பதியில் நவ.18ம் தேதி முதல் டிச.10ம் தேதி வரை தரிசன டோக்கன் வைத்திருந்தும் திருமலை தரிசனம் செய்ய முடியாமல் உள்ள பக்தர்கள் அடுத்த 3 மாதங்களுக்குள் தரிசனம் செய்துகொள்ளலாம் என்று தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
திருமலை திருப்பதி:
கொரோனா பரவல் குறைந்து வருவதை கருத்தில் கொண்டு ஆந்திர மாநிலத்தில் உள்ள திருமலை திருப்பதி ஏழுமலையான் திருக்கோயிலில் கடந்த சில வாரங்களாக தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அவ்வாறு தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு கொரோனா பாதுகாப்பு உறுதி செய்யும் வகையில் நேரடி டோக்கன் முறை ரத்து செய்யப்பட்டு ஆன்லைன் முறையில் டோக்கன் முன்பதிவு செய்யும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டது.
TNPSC தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு – பாடத்திட்டம், மதிப்பெண் விவரம் இதோ!
இவ்வாறு தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக திருமலைக்கு செல்லும் வழியில் சேதங்கள் ஏற்பட்டுள்ளது. அதாவது தொடர் கனமழை காரணமாக திருமலைக்கு செல்லும் மலைப்பாதையில் பாறை உருண்டு பாதையில் விழுந்து மண்சரிவு ஏற்பட்டுள்ளது. அதனால் மரங்கள் மற்றும் கிளைகள் சாலையில் முறிந்து விழுந்துள்ளதால் திருமலைக்கு செல்லும் வழியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசுப்பணி பெற ‘இது’ கட்டாயம் – நிதியமைச்சரின் அடுக்கடுக்கான அறிவிப்புகள்!
அதனால் முன்பதிவு செய்திருந்த பக்தர்கள் தரிசனத்தை தள்ளிவைக்குமாறு திருப்பதி தேவஸ்தானம் ஏற்கனவே கேட்டுக்கொண்டது. அதனை தொடர்ந்து தற்போது திருப்பதியில் நவ.18ம் தேதி முதல் டிச.10ம் தேதி வரை தரிசன டோக்கன் வைத்திருந்தும் திருமலை தரிசனம் செய்ய முடியாமல் உள்ள பக்தர்கள் அடுத்த 3 மாதங்களுக்குள் தரிசனம் செய்து கொள்ளலாம் என்று தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் முன்பதிவு செய்துள்ள அனைத்து தரிசன டோக்கன்களையும் வேறு தேதிகளுக்கு மாற்றிக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.