தமிழகத்தில் அரசுப்பணி பெற ‘இது’ கட்டாயம் – நிதியமைச்சரின் அடுக்கடுக்கான அறிவிப்புகள்!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் அனைத்து விதமான போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி தேர்வை கட்டாயப்படுத்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து தமிழ்மொழித்தாள் தேர்வில் குறைந்தது 40% மதிப்பெண் வாங்கினால் தான் அடுத்த சுற்றுக்கு தகுதிபெற முடியும் என்று நிதியமைச்சர் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் கூறியுள்ளார்.
TNPSC முக்கிய அறிவிப்பு:
தற்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் Group III மற்றும் Group IV போன்ற தேர்வுகளில் பொதுத்தமிழ் / பொது ஆங்கிலம் உள்ளதை தற்போது பொது ஆங்கிலத்தாள் நீக்கப்பட்டுள்ளது. மேலும் பொது தமிழ்மொழித் தாள் மட்டுமே மதிப்பீட்டுத் தேர்வாக அமைக்கப்படும் என்றும் தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இத்துடன் TNPSC நடத்தும் அனைத்து விதமான போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழித்தேர்வை கட்டாயமான முறையில் கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் தமிழ்நாடு அரசின் அனைத்து பணியிடங்களில் தமிழக இளைஞர்களையே அதிகமான அளவு பணியிடங்களை நியமிக்கலாம். மேலும் வெளிமாநிலத்தவர் தமிழக அரசு பணிகளில் சேர்வதையும் கட்டுப்படுத்த முடியும்.
இந்தியாவில் மீண்டும் முழு ஊரடங்கு? ஓமிக்ரான் அச்சம் எதிரொலி! மத்திய அரசின் விளக்கம்!
தற்போது மின்வாரியத்தில் அதிக அளவு வெளிமாநிலத்தவர்கள் தான் பணியில் சேர்ந்ததாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதைத் தடுக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனை தொடர்ந்து தமிழ்மொழித்தாள் தேர்வில் குறைந்தது 40% மதிப்பெண் வாங்கினால் தான் அடுத்த சுற்றுக்கு தகுதிபெற முடியும் என்றும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார். அதாவது தமிழ் மொழி தகுதித் தேர்வானது 100 மதிப்பெண்கள் கொண்டதாக அமைக்கப்படும். இத்தகுதித்தாளில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண் தேர்ச்சி பெற்ற பிறகு முதன்மை எழுத்துத் தேர்வின் இதர போட்டித் தேர்வுத்தாள் மதிப்பீடு செய்ய முடியும்.
சிறந்த coaching centre – Join Now
அத்துடன் தமிழ் மற்றும் தமிழ்நாடு குறித்து கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான பதில் அளித்தால் மட்டுமே தமிழக அரசு பணிகளில் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பில் தமிழ் பாடத்தில் 40% மதிப்பெண் பெற்றிப்பதும் தற்போது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ் நாட்டில் தமிழ் மக்களோடு பணியாற்றும் அரசு பணியாளர்களுக்கு தமிழ் மொழி தெரிந்து இருக்க வேண்டும். கடந்த ஆண்டுகளில் தமிழ் தெரியாத வெளிமாநிலத்தவர்கள் அரசு பணிகளில் அமர்த்தப்பட்டார்கள். இதனை தடுப்பதற்கு தமிழக அரசு தற்போது தமிழ் மொழி கட்டாயம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளதாகவும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.