
தமிழகத்தில் நாளை (செப். 28) மின்தடை ஏற்படும் பகுதிகளின் விவரங்கள் – மின்சார வாரியம் முக்கிய அறிவிப்பு!
தமிழக அரசின் மின்சாரத் துறையின் கீழ் இயங்கி வரும் துணைமின்நிலையங்களில் மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை (செப்.28) திருச்சி மாவட்டம் கே.சாத்தனூர், வேங்கை மண்டலம் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை பகுதிகள்:
தமிழகத்தில் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என பல முயற்சிகளை அரசு எடுத்து வருகிறது. அவ்வப்போது மழை பெய்வதால் பல இடங்களில் மின் விபத்துகள் ஏற்படுகிறது. அவ்வாறு ஏற்படாத வண்ணம் மின்சார துறையின் கீழ் உள்ள துணை மின் நிலையங்களில் மாதம் மாதம் பராமரிப்பு பணிகள் நடத்தப்பட்டு, சோதனை செய்யப்படுகின்றன. அந்த வகையில் நாளை ( செப். 28) திருச்சி மாவட்டம் கே. சாத்தனூர், வேங்கை மண்டலம் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனால் அந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் செல்லும், பகுதிகளில் நாளை காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி கே.சாத்தனூர் துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் செல்லும் பகுதிகளான, கிருஷ்ணமூர்த்திநகர், சுந்தர்நகர், அய்யப்பநகர், இந்தியன் பேங்க் காலனி, காஜாமலைகாலனி, எஸ்.எம்.இ.எஸ்.இ.காலனி, கே.சாத்தனூர், கே.கே.நகர், இச்சிகாமலைப்பட்டி, மன்னார்புரம் ஒரு பகுதி, சிம்கோகாலனி, எல்.ஐ.சி.காலனி, பழனிநகர், முல்லைநகர், ஓலையூர், குடித்தெரு, பாரதிநகர், காமராஜ்நகர், ஆர்.வி.எஸ்.நகர், வயர்லெஸ்ரோடு, வடுகப்பட்டி, பாரிநகர், காஜாநகர், செம்பட்டு பகுதி, ஜே.கே.நகர், சந்தோஷ்நகர், ஆனந்த்நகர், ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Jio-வின் மலிவு விலை 5ஜி ஸ்மார்ட்போன்கள் விரைவில் அறிமுகம் – வெளியான அதிரடி அறிவிப்பு!
வேங்கை மண்டலம் துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் செல்லும், சிறுகாம்பூர் பிரிவு அலுவலகத்துக்கு உட்பட்ட மூவானூர், மேலக்கண்ணுக்குளம், கீழக்கண்ணுக்குளம், பார்வதிபுரம், குருவம்பட்டி,வேங்கை மண்டலம், தண்ணீர்பந்தல்,சிறுகாம்பூர், நெ.2 காரியமாணிக்கம், சென்னகரை, ராமகிரிப்பட்டி, செங்குடி, கல்லூர், வேப்பந்துறை, சோழங்கநல்லூர், செந்தாமரைக்கண், வாழ்மால்பாளையம், செட்டிமங்கலம், நெய்வேலி, கிளியநல்லூர், வாத்தலை, வி.மணியம்பட்டி, மண்ணச்சநல்லூர், சுனைப்புகநல்லூர், ஈச்சம்பட்டி, சிலையாத்தி, துடையூர், பாண்டியபுரம், ஆகிய இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
Exams Daily Mobile App Download
மேலும் டவுன் ஆகிய பிரிவு அலுவலகங்களுக்கு உட்பட்ட தீராம்பாளையம், தில்லாம்பட்டி, பழையூர், குருவிக்காரன்குளம், காட்டுக்குளம், மூவராயம்பாளையம், கவுண்டம்பட்டி, செங்குழிப்பட்டி, உடையாம்பட்டி, திருப்பைஞ்சீலி, திருவரங்கப்பட்டி, காளவாய்ப்பட்டி, பூனாம்பாளையம், பெரமங்கலம், சத்திரப்பட்டி, மாயாண்டிக்கோட்டம், திருவெள்ளறை, ராசாம்பாளையம், சாலக்காடு, புலிவலம் பிரிவு அலுவலகத்துக்கு உட்பட்ட இடங்களான புலிவலம், மண்பறை, திருத்தலையூர், நல்லயம்பட்டி, சந்தனப்பட்டி, டி.புதுப்பட்டி, பழம்புதூர் ஆகிய இடங்களிலும் மின்சாரம் காலை முதல் மாலை வரை நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்