தமிழகத்தில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? வலுக்கும் கோரிக்கை!

0
தமிழகத்தில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? வலுக்கும் கோரிக்கை!
தமிழகத்தில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? வலுக்கும் கோரிக்கை!
தமிழகத்தில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? வலுக்கும் கோரிக்கை!

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த இருப்பதாக தி மு க தங்களின் தேர்தல் வாக்கு உறுதியில் தெரிவித்து இருந்தது. இந்நிலையில் தற்போது இது குறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் கு. பாலசுப்பிரமணியன் அவரது சார்பில் இந்த திட்டத்தை மீண்டும் அறிவிக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்து உள்ளார்.

பழைய ஓய்வூதிய திட்டம்:

தமிழ்நாட்டை பொறுத்த வகையில் பழைய ஓய்வூதியத் திட்டம் பற்றிய சர்ச்சை சமீப காலங்களில் மீண்டும் வரத் தொடங்கியுள்ளது. சில மாநிலங்கள் இத்திட்டத்தை மீண்டும் அமல்படுத்தியதே இதற்குக் காரணமாகும். ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேச அரசுகளைத் தொடர்ந்து ஜார்க்கண்ட் அரசும் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் தமிழகத்தில் திமுகவின் தேர்தல் வாக்கு உறுதிகளில் ஒன்றாக இதுவும் இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில வருடங்களாகவே அரசு ஊழியர்கள் சார்பில் ஒரு கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. அந்த கோரிக்கை என்னவென்றால், தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும் ஓய்வுக்கு பின்னர் அவர்களுக்கு ஓய்வூதியம் வரும் படியான திட்டம் செயல்முறையில் இருந்து வந்தது.

தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு புதிய எச்சரிக்கை – அமைச்சர் அறிவிப்பு!

இந்நிலையில் சமீபத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் கு. பாலசுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டி ஒன்றை அளித்து உள்ளார். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது, ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பெற்று வந்த பழைய ஓய்வூதியத்தை கடந்த 2003ம் ஆண்டு மாற்றி புதிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தி உள்ளது தமிழக அரசு. மேலும் புதிய ஓய்வூதிய திட்டமானது, ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்காமல் பணி ஓய்வு பெறும்போது ஒரு குறிப்பிட்ட தொகையை மொத்தமாக வழங்கும் அடிப்படையில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் இந்த திட்டத்துக்கு அரசு ஊழியர்களின் சார்பில் எதிர்ப்பு எழுந்து வருகிறது. இந்நிலையில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, மறுபடியும் பழைய ஓய்வூதிய திட்டத்தையே அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை அரசு ஊழியர்கள் சார்பாக கிட்டத்தட்ட 15 வருடங்களுக்கு மேலாக வைத்து போராடி வருகின்றனர். ஆனால் இன்றளவும் தமிழக அரசு இந்த கோரிக்கையை கண்டு கொள்ளவில்லை.

மார்ச் 17ம் தேதி முதல் தலைநகரில் முழு ஊரடங்கு அமல் – அரசு புதிய நடவடிக்கை!

இந்த நிலையில் அடுத்தாக நடைபெற உள்ள சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இது குறித்து பேசுவார் என்று எதிர்பார்க்க படுகிறது என்றும், இது தவிர தமிழகத்தில் உள்ள பல குறைகளை தீர்க்க கோரிக்கை வைத்து உள்ளார். அதனை தொடர்ந்து வருகின்ற மார்ச் 17 ஆம் தேதி தமிழக முதல்வரை சந்தித்து தங்களது கோரிக்கைகளை வைக்க உள்ளதாக தெரிவித்து உள்ளனர். மேலும் இந்த பேட்டியில் தமிழ்நாடு நியாய விலை கடை பணியாளர் சங்க மாநில தலைவர் கோ. ஜெயசந்திரராஜா ஆகியோர் உடன் இருந்துள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!