கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய தடையை எதிர்த்து மேல்முறையீடு – மாணவிகள் புதிய முயற்சி!
கர்நாடகாவில் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய தடை விதித்து அம்மாநில உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனை எதிர்த்து மனுதாரர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
ஹிஜாப்:
கர்நாடக மாநிலத்தில் கல்லூரிகளுக்கு மாணவிகள் ஹிஜாப் அணிய கல்லூரி நிர்வாகம் தடை விதித்தது. இந்த விவகாரம் கர்நாடகாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த தடையை அடுத்து பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் ஹிஜாப் அணியாமல் வர மறுத்தனர். மேலும் ஹிஜாப் அணிந்து வருபவர்கள் பள்ளி, கல்லூரிகளிலும் அனுமதிக்கப்படவில்லை. இதனை எதிர்த்து இஸ்லாமிய மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நேரத்தில் இந்து சமயத்தை சேர்ந்தவர்கள் காவி துண்டு அணிந்தும் போராட்டம் நடத்தினர். இதனால் அம்மாநிலத்தில் பரபரப்பு நிலவியது. ஹிஜாப் அணிவதை தடை செய்ததை கண்டித்து இஸ்லாமிய மாணவிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
தமிழகத்தில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? வலுக்கும் கோரிக்கை!
இந்த நிலையில் வழக்கு குறித்து தீர்ப்பு வரும் வரை கல்வி நிலையங்களில் மாணவர்கள் எவ்வித மத குறியீடுகள் மற்றும் உடைகளை அணிந்து கொள்ள கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. தற்போது ஹிஜாப் விவகாரத்தில் வெளியான தீர்ப்பில் இஸ்லாத்தில் ஹிஜாப் அணிவது அத்தியாவசிய மத நடைமுறை கிடையாது. அதனால் கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும் கூறப்பட்டுள்ளது. முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிவது இஸ்லாத்தின் அத்தியாவசியமான நடைமுறையில் இல்லை. கலாச்சாரத்தின் அடிப்படையில் ஹிஜாப் அணியப்படுகிறது.
தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு புதிய எச்சரிக்கை – அமைச்சர் அறிவிப்பு!
கலாச்சாரமும், மதமும் வெவ்வேறானவை. கல்வி நிலையங்கள் பொது இடமாகும். கல்வி நிலையங்களில் ஒழுக்கம், சீருடை கண்டிப்புடன் பின்பற்றப்பட வேண்டும். சீருடை விதிகளுக்கு பெற்றோர் ஒப்புதல் தெரிவித்த பிறகே கல்வி நிலையங்களில் சேர்க்கை நடைபெறுகிறது. கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும் என்று கூறி முஸ்லிம் மாணவிகளின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில் இதனை எதிர்த்து இஸ்லாமிய மாணவிகள் மனுவை மேல் முறையீடு செய்துள்ளனர்.