தமிழக ரேஷன் அட்டைதார்களுக்கு பொங்கல் பரிசுத்தொகையாக 3000 ரூபாய் – அரசுக்கு வலியுறுத்தல்!!
தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2022ம் ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்புடன் 3000 ரூபாய் பரிசுத் தொகை வழங்க வேண்டும் என்று தேமுதிகவினர் அரசை வலியுறுத்தியுள்ளனர்.
பொங்கல் பரிசுத் தொகுப்பு:
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் மலிவு விலையில் அரிசி, பருப்பு, சர்க்கரை, சமையல் எண்ணெய், போன்ற பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் விதிக்கப்பட்ட ஊரடங்கு காலத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச மளிகை தொகுப்பு, கொரோனா நிவாரண தொகை போன்றவைகள் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஆண்டுதோறும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுப்பொருளாக பொங்கல் வைப்பதற்கு தேவையான பொருட்கள் இலவச வேட்டி, சேலை, கரும்பு போன்ற பொருட்கள் வழங்கப்படும். மேலும் சிறப்பு பரிசுத் தொகையும் வழங்கப்படும்
கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாவனி & அக்ஷரா – காரசாரமான பிக் பாஸ் ப்ரோமோ!!
அதே போல இந்தாண்டும் பொங்கல் பரிசுப்பொருட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கடுகு, சீரகம், மல்லி தூள், மிளகு, புளி, கோதுமை மாவு, ரவை, உப்பு, மிளகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு உள்ளிட்ட 21 வகை பொருட்களை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் முதன் முறையாக ஆவின் நெய் 10 மிலி வழங்கப்படும் என்ற அறிவிப்பு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
TET தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு – நாளை (டிச.06) இலவச ஆன்லைன் மாதிரி தேர்வு!!
வழக்கமாக பொங்கல் பரிசு தொகுப்புடன் பரிசுத்தொகை வழங்கப்படுவது வழக்கம் ஆனால் இந்த வருடம் ரொக்கப்பணம் குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால் ரேஷன் அட்டைதாரர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த நிலையில் 2022ம் ஆண்டு பொங்கல் பரிசு தொகுப்புடன் 3000 ரூபாய் பரிசுத்தொகை வழங்க வேண்டும் என்று தேமுதிகவினர் வலியுறுத்தியுள்ளனர்.