கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாவனி & அக்ஷரா – காரசாரமான பிக் பாஸ் ப்ரோமோ!!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் நடந்த அனைத்து பிரச்சனைகளையும் கமல் விசாரித்து முடித்த நிலையில், இந்த வார தொடக்கத்திலேயே போட்டியாளர்களிடையே மேலும் சண்டைகளை அதிகரிக்கும் வகையில் டாஸ்குகள் கொடுக்கப்பட்டுள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சி:
விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த வாரம் முழுவதும் பல சண்டைகளோடு சென்றது. இதில், நண்பர்களாக இருந்த பலரும் எதிரிகளாகியுள்ள அளவிற்கு சண்டை நடந்துள்ளது. இதனால் வார இறுதி எபிசோடில் சிகிச்சை முடிந்து மீண்டும் வந்துள்ள கமல் விசாரணை நடத்தி முடித்துள்ளார். இதனால் இந்த வாரம் சற்று அமைதியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பாராததை எதிர்பார்ப்பது தானே பிக் பாஸ். இந்த வாரத்தின் முதல் நாளிலேயே சண்டை பெரிய அளவில் வெடித்துள்ளது.
தமிழக வங்கிகளில் 10வது முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – மாவட்ட வாரியாக காலிப்பணியிடங்கள்..!
அதவாது தலைவர் பதவிக்கு போட்டியாளர்கள் மத்தியில் போட்டி நடத்துவது போல் முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில், அமர் ஜெயிக்கிறார். ஆனால் நாணயத்தின் அதிகாரத்தை பயன்படுத்தி பாவனி தலைவர் ஆகிறார். இதனால் அமீர் கோபப்படுவது போல் ப்ரோமோ உள்ளது. தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவை வைத்து பார்க்கையில், பாவனி நாணயத்தின் அதிகாரத்தை பயன்படுத்தியுள்ளதால் கடந்த வாரம் நிரூப்க்கு அளிக்கப்பட்ட தண்டனை போல், பாவனிக்கு ஒரு தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பாவனி அனைவருக்கும் உதவிகளை செய்ய வேண்டும் என்று பிக்பாஸ் உத்தரவிட்டுள்ளார். இதனால் அக்ஷரா பாவனியை உதவிகளை செய்யும் படி கூறுகிறார். இதனால் அக்ஷரா மற்றும் பாவனி இடையே கடும் வாக்குவாதம் எழுகிறது. இதனை வீட்டின் மற்ற போட்டியாளர்கள் அனைவரும் மிகவும் அதிர்ச்சியுடன் பார்க்கின்றனர். இதனை வைத்து பார்க்கும் போது இந்த வாரமும் அதிக சண்டைகள் உடன் சுவராஸ்யமாக இருக்கும் என்று ரசிகர்கள் மத்தியில் அதிக ஆர்வம் அதிகரித்துள்ளது.