இந்தியாவில் டெல்டாவை போல பரவுகிறது ஓமிக்ரான் – மத்திய அரசு தகவல்! பொதுமக்கள் அச்சம்!
இந்தியாவில் டெல்டா வகை வைரஸ் தொற்றை போல ஓமிக்ரான் தீவிரமாக பரவி வருகிறது என்று மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. மேலும் நாடு முழுவதும் இதுவரை 25 மாநிலங்களில் ஓமிக்ரான் பரவியுள்ளது.
ஓமிக்ரான்:
உலகம் முழுவதும் 120க்கும் மேற்பட்ட நாடுகளில் தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை ஓமிக்ரான் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் அனைத்து நாடுகளும் மீண்டும் தடுப்பு பணிகளை வேகப்படுத்தி வருகிறது. இன்னும் சில நாடுகளில் ஒரு புறம் கொரோனா தொற்று பாதிப்புகளும் உயர்ந்து வருகிறது. மற்ற நாடுகளை தொடர்ந்து அதிக மக்கள் தொகையை கொண்ட இந்தியாவிலும் ஓமிக்ரான் பரவ தொடங்கியுள்ளது. தென்னாப்பிரிக்காவில் இருந்து கர்நாடகா வந்த இருவருக்கு முதலில் தொற்று உறுதி செய்யப்பட்டது.
மாநில அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – ஜாக்பாட் அறிவிப்பு!
அதனை தொடர்ந்து டெல்லி, மகாராஷ்டிரா, தெலுங்கானா, தமிழ்நாடு கர்நாடக உள்ளிட்ட 25 மாநிலங்களில் ஓமைக்ரான் பரவி வருகிறது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 450 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.ஏற்கனவே கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தவர்களும், கொரோனா தடுப்பூசி 2 டோஸ் செலுத்தியவர்களும் தொற்று கண்டறியப்பட்டு வருவது பொது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தடுப்பு பணியாக மாநில அரசுகள் தேவைப்பட்டால் ஊரடங்கை அறிவித்து கொள்ளலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இரவு ஊரடங்கு உத்தரவு நீக்கம், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி – அறிக்கை வெளியீடு!
இதையடுத்து ஓமிக்ரான் அதிகரித்து வரும் மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் ஒமிக்ரான் தொற்று பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த 52 வயதுடையவர் திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். இந்நிலையில் டெல்டா கொரோனாவுக்கு மாற்றாக தற்போது ஒமிக்ரான் பரவ தொடங்கியுள்ளது என ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. ஒமிக்ரான் தொற்று பரவல் டெல்டா வைரஸ் நிலையை எட்டியுள்ளதாக சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.