மாநில அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – ஜாக்பாட் அறிவிப்பு!

0
மாநில அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு - ஜாக்பாட் அறிவிப்பு!
மாநில அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு - ஜாக்பாட் அறிவிப்பு!
மாநில அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – ஜாக்பாட் அறிவிப்பு!

கோவா மாநிலத்தில் அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு அம்மாநில முதலமைச்சர் முக்கிய அறிவுறுத்தலை வழங்கியுள்ளார்.

ஊதிய உயர்வு:

நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும் மாநில வாரியாக ஊதிய உயர்வு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் உத்திரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. தற்போது கோவா மாநிலத்தில் ஊதிய உயர்வு வழங்குமாறு கோரிக்கை வைத்து அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதாவது கோவா மாநிலத்தில் முதலமைச்சர் பிரமோத் சவாந்த் தலைமையிலான பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. கோவா மாநிலத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.

சென்னையில் போக்குவரத்து நெரிசல் – கனமழை எதிரொலி!

இந்நிலையில் ஊதிய உயர்வு வேண்டி அங்கன்வாடி ஊழியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஊதிய உயர்வு உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளும் முழுமையாக நிறைவேற்றப்படும் வரை இந்த போராட்டம் தொடரும் என்று அங்கன்வாடி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் மத்தியில் முதலமைச்சர் பிரமோத் சவாந்த் அவர்கள் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது அவர் அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Post Office வங்கியில் வரப்போகும் மாற்றங்கள் – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

அதாவது அங்கன்வாடி ஊழியர்களின் 90% கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு விட்டன. அந்த வகையில் அங்கன்வாடி ஊழியர்களின் ஊதிய உயர்வு கோரிக்கை கடந்த நவம்பர் மாதம் ஏற்றுக்கொள்ளப்பட்டு அதற்கான அரசாணை வெளியிடப்பட்டு விட்டது. அதன்படி வரும் 2022 ஏப்ரல் மாதம் 1ம் தேதி முதல் ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து அவர்களுக்கு அரியர் பணம் மற்றும் ஓய்வூதிய பணப் பலன்களும் உயர்த்தி வழங்கப்பட்டு உள்ளன என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் அங்கன்வாடி ஊழியர்கள் 30% வரை ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்றும், தற்போது வழங்கிய ஊதிய உயர்வில் திருப்தி இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!