9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு பள்ளி துவக்கம் – டெல்லி முதல்வர் விளக்கம்!!
நாட்டின் தலைநகரான டெல்லியில் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அதிநவீன சிறப்பு பள்ளியை டெல்லி முதல்வர் திறந்து வைத்தார். டெல்லியில் ஜனக்புரியில் DESU காலனியில் இந்த பள்ளி கட்டப்பட்டுள்ளது.
சிறப்பு பள்ளி:
டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் புதிய அதிநவீன சிறப்புப் பள்ளி திறக்கப்பட்டுள்ளது. ஜனக்புரியின் DESU காலனியில் அனைத்து நவீன வசதிகளுடன் இந்த பள்ளி கட்டப்பட்டுள்ளது. அடுத்து வரும் கல்வியாண்டு முதல் மாணவர்கள் இந்த பள்ளியில் சேரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொறியியல், மருத்துவம், தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு என பல்வேறு துறைகளில் குழந்தைகளின் திறமையை வெளியே கொண்டு வர இந்த பள்ளி நிறுவப்பட்டுள்ளது
BBC வெளியிட்ட ஆவணப்படம்… மத்திய அரசு அதிரடி தடை… உச்ச நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!
மேலும் நாட்டில் இது போல பெரிய பள்ளி இதுவரை கட்டப்படவில்லை. இதுவரை சிறப்புப் பள்ளிகளில் 4,400 இடங்களில் சேர்க்கைக்கு 96,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதுவரை ஐஐடி மற்றும் மருத்துவப் படிப்புகளுக்குக் கூட இந்த அளவிற்கு விண்ணப்பங்கள் வரவில்லை என முதல்வர் பேசுகையில் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு குழந்தைகளும் தனி திறமையுடன் இருக்கின்றனர். அதனால் அவர்களின் திறமையை வெளியே கொண்டு வருவதை இந்த பள்ளி நோக்கமாக கொண்டுள்ளது.
இந்த பள்ளியில் பொறியியல், மருத்துவம், மனிதநேயம் மற்றும் செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணினிகள் போன்ற 21 ஆம் நூற்றாண்டின் திறன் தொகுப்பின் மேம்பாட்டில் கவனம் செலுத்தப்படுகிறது. மேலும் மாணவர்கள் 8 ஆம் வகுப்பு முடித்த பின் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்க இந்த பள்ளியில் சேரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.