BBC வெளியிட்ட ஆவணப்படம்… மத்திய அரசு அதிரடி தடை… உச்ச நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!
சர்வதேச ஊடகமான பிபிசி அண்மையில் குஜராத் கலவரம் தொடர்பாக வெளியிட்ட ஆவணப்படத்திற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் தற்போது உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
ஆவணபடம்:
இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு மிகப்பெரிய கலவரம் ஒன்று நடைபெற்றது. இந்த கலவரத்தில் ஏராளமானோர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது குஜராத் கலவரம் நடந்து முடிந்து 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. இந்த நிலையில் சர்வதேச ஊடகமான பிபிசி அண்மையில் குஜராத் கலவரம் தொடர்பாக ஆவணப்படம் ஒன்றை 2 பாகங்களாக வெளியிட்டுள்ளது.
PPF திட்டத்தில் உச்ச வரம்பு, வட்டி விகிதம் உயரவில்லையா? ஏமாற்றத்தில் சாமானிய மக்கள்!
Follow our Instagram for more Latest Updates
இந்த ஆவணப்படம் பெரும் சர்ச்சையை உருவாகும் என்பதை கருத்தில் கொண்டும், இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிராக இருப்பதாக கூறியும் மத்திய அரசு சமூக வலைதளங்கள் மற்றும் டிவி சேனல்களில் திரையிட தடை விதித்தது. மேலும் ஆவணப்படம் தொடர்பான காட்சிகள் மாற்று இணைப்புகளும் சமூக வலைதள பக்கங்களில் இருந்து நீக்கப்பட்டது.
இந்த தடையை எதிர்த்து பல்வேறு அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இது குறித்த விசாரணையில் உச்ச நீதிமன்றம் பிபிசி ஆவணப்படத்திற்கு தடை விதித்தது குறித்து மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மேலும் அடுத்த மூன்று வாரங்களில் இந்த விவகாரத்தில் மத்திய அரசு பதிலளிக்க கோரி நோட்டீஸ் அனுப்பவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.