TN TET ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – தேதி அறிவிப்பு தாமதம்!

0
TN TET ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு - தேதி அறிவிப்பு தாமதம்!
TN TET ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு - தேதி அறிவிப்பு தாமதம்!
TN TET ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – தேதி அறிவிப்பு தாமதம்!

தமிழகத்தில் நடப்பு ஆண்டுக்கான டெட் தேர்வுக்கு, ஆன்லைன் வழியே விண்ணப்பங்கள் வரவேற்க்கப்பட்டு ஒன்றரை மாதங்கள் ஆகி உள்ளது. இந்நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம், டெட் தேர்வு குறித்த அறிவிப்பை இதுவரை வெளியிடவில்லை. இது குறித்து முழு விவரத்தை இப்பதிவில் பார்க்கலாம்.

அதிருப்தியில் தேர்வர்கள்:

மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கு டெட் எனப்படும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் ஆகும். தமிழகத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் டெட் (TET) தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்தத் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது. இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அவர்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களாக நியமிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசின் சட்டப்படி, ஒவ்வொரு கல்வி ஆண்டிலும், இரண்டு முறை டெட் தேர்வை மாநில அரசுகள் நடத்த வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

மேலும் தமிழகத்தில் கொரோனா வருகைக்கு பின்னர் அரசு தேர்வுகள் குறித்த அறிக்கை நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் நோய் பரவல் கட்டுக்குள் வந்து உள்ளதால், அதை கருத்தில் கொண்டு தமிழக அரசு அனைத்து தேர்வு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் ஆசிரியர் பணி தேர்வுக்காக காத்து கொண்டிருந்தவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக ‘TET’ ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பை மார்ச் 7ல், ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி வெளியிட்டது. மேலும் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்ரல் 26 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது.

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு சனிக்கிழமை தோறும் விடுமுறை – கல்வித்துறை அறிவிப்பு!

இதன் அடிப்படையில், ஆசிரியர் பணியில் சேர்வதற்கான, ‘டெட்’ தகுதி தேர்வுக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு, ஒன்றரை மாதங்கள் ஆகியும், தேர்வு தேதியை இன்னும் அறிவிக்காததால், தேர்வர்கள் அதிருப்தி அடைந்து உள்ளனர். தமிழகம் முழுவதும் இந்த தேர்வுக்கு 6 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர்.விண்ணப்ப பதிவு முடிந்து ஒன்றரை மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், தேர்வு எப்போது நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்பில் தேர்வர்கள் உள்ளனர். மேலும் தேர்வை விரைந்து நடத்தினால் மட்டுமே, விண்ணப்பித்து காத்திருக்கும் பட்டதாரிகள், தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று, நடப்பு கல்வி ஆண்டிலேயே, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், ஆசிரியர் பணியில் சேர முடியும் என தெரிவித்துஉள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!