IPL 2022: CSK ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் – ஏப்ரல் 25 முதல் அணிக்கு திரும்பும் தீபக் சாஹர்!
நடப்பு சாம்பியனான CSK அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் தீபக் சாஹர் காயத்தில் இருந்து மீண்டு வந்து கொண்டிருக்கும் நிலையில், ஏப்ரல் 25ம் தேதிக்கு பின்னர் அவர் போட்டிகளில் களமிறங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தீபக் சாஹர்
கடந்த பிப்ரவரி மாதத்தில் நடைபெற்ற 2022ம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் (IPL) போட்டிகளின் மெகா ஏலத்தில் ஆல்ரவுண்டர் தீபக் சாஹரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 14 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. இதற்கிடையில் கடந்த சீசன்களில் எம்எஸ் தோனியின் தலைமையிலான CSK அணியின் மிகப்பெரிய ஆயுதமாக இருந்த தீபக் சாஹர் காயம் காரணமான இன்னும் அணியில் இணையவில்லை. இவரது இழப்பு CSK அணிக்கு பேரிழப்பாக இருந்து வருகிறது. ஏனென்றால் நடப்பு சாம்பியனான CSK அணி இந்த சீசனுக்கான போட்டியில், கடந்த 3 ஆட்டங்களில் தோல்வியை தழுவி இருக்கிறது.
ரேஷன் அட்டைதாரர்களுக்கான முக்கிய அறிவிப்பு – ஆதாரை இணைக்க ஜூன் 30 கடைசி நாள்!
ஏனென்றால் பேட்டிங் பிரிவில் CSK அணியில் தடுமாற்றம் காணப்பட, பந்து வீச்சு பகுதியில் தீபக் சாஹர் இல்லாதது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. கடந்த ஏப்ரல் 2ம் தேதி அன்று கூட, பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 54 ரன்கள் வித்தியாசத்தில் CSK தோல்வி அடைந்திருக்கிறது. இருப்பினும் அடுத்த ஆட்டத்தில் வெல்வதற்கான பலத்துடன் மீண்டு வருவோம் என்று கேப்டன் ரவீந்திர ஜடேஜா நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்த நிலையில் காயத்தால் அவதிப்பட்டு வரும் ஆல்-ரவுண்டர் தீபக் சாஹர் ஏப்ரல் 25 ஆம் தேதி முதல் IPL போட்டிகளில் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இது தொடர்பான அறிக்கையின்படி, பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் ஏப்ரல் 25 அன்று தீபக் சாஹர் மீண்டும் அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் CSK ஏற்கனவே 3 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளதால் இது தாமதமான நடவடிக்கை என்று CSK ரசிகர்கள் கருதுகின்றனர். இருந்தாலும் தீபக் சாஹரின் வருகை CSK அணிக்கு நம்பிக்கை அளிக்கக்கூடிய விஷயமாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. கடந்த IPL சீசனில், தீபக் சாஹர் 15 ஆட்டங்களில் விளையாடி 14 விக்கெட்டுகளை எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.