ரேஷன் அட்டைதாரர்களுக்கான முக்கிய அறிவிப்பு – ஆதாரை இணைக்க ஜூன் 30 கடைசி நாள்!

0
ரேஷன் அட்டைதாரர்களுக்கான முக்கிய அறிவிப்பு - ஆதாரை இணைக்க ஜூன் 30 கடைசி நாள்!
ரேஷன் அட்டைதாரர்களுக்கான முக்கிய அறிவிப்பு - ஆதாரை இணைக்க ஜூன் 30 கடைசி நாள்!
ரேஷன் அட்டைதாரர்களுக்கான முக்கிய அறிவிப்பு – ஆதாரை இணைக்க ஜூன் 30 கடைசி நாள்!

அரசின் அனைத்து நலத் திட்டங்களையும் தங்கு தடையின்றி பெற விரும்பினால் ரேஷன் கார்டுடன் ஆதார் கார்டை இணைப்பது மிகவும் அவசியமாகும். தற்போது ரேஷன் கார்டுடன் ஆதார் கார்டை இணைக்க ஜூன் 30 ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

ரேஷன் – ஆதார்:

தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் பல லட்சக்கணக்கான ஏழை எளிய மக்கள் அரிசி, பருப்பு, எண்ணெய் முதலான மலிவு விலையில் கிடைக்கும் பொருட்களை வாங்கி பயன் பெற்று வருகின்றனர். PHH, PHH – AYY, NPHH, NPHH – NC என பல ரேஷன் கார்டு அமைப்புடைய ரேஷன் அட்டைகள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் வேலைக்காக இடம்பெயரும் தொழிலாளர்களை கருத்தில் கொண்டு ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்கிற திட்டம் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.

TCS நிறுவன ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு – வீட்டில் இருந்தே வேலை (WFH) தொடருமா?

ரேஷன் கார்டு மலிவு விலை பொருட்களை வாங்குவதற்கு மட்டுமல்லாமல் தமிழக அரசின் பல திட்டங்களை பெறுவதற்கும் ரேஷன் கார்டு மிகவும் அவசியமான ஒன்றாகிவிட்டது. அரசின் நலத்திட்டங்களை பெற விரும்பினால் அவ்வப்போது ரேஷன் கார்டு குறித்த தகவலை அப்டேட் செய்ய வேண்டும். மேலும், ரேஷன் கார்டு விஷயத்தில் அவ்வப்போது பல மோசடிகள் நடைபெறுகின்றன. இது போன்ற மோசடிகளில் இருந்து தப்பிக்க ரேஷன் கார்டுடன் ஆதார் கார்டை இணைப்பது அவசியமாகும். அவ்வப்போது ரேஷன் கார்டுடன் ஆதார் கார்டை இணைக்க கால அவகாசம் வழங்கப்படுகிறது. ஏற்கனவே மார்ச் 31ஆம் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. தற்போது அவகாசத்தை நீட்டித்து ஜூன் 30 ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

தற்போது ரேஷன் அட்டையை எப்படி ஆதார் தகவலுடன் இணைப்பது என்பது பற்றி பார்க்கலாம். முதலில் uidai.gov.in. என்கிற இணையதள முகவரிக்கு சென்று Start Now பட்டனை கிளிக் செய்து கொள்ளவும். பின்பு அதில், முகவரி, மாவட்டம், மாநிலம் குறித்த அனைத்து விவரங்களையும் பதிவு செய்ய வேண்டும். பின்பு ration card benefit பகுதியை கிளிக் செய்து ஆதார் எண், ரேஷன் கார்டு எண், இமெயில் ஐடி, மொபைல் நம்பர் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பதிவு செய்ய வேண்டும். அதன் பின்பு பதிவு செய்த மொபைல் நம்பருக்கு OTP வரும். அந்த OTP எண்ணை பதிவு செய்து விட்டால் ரேஷன் கார்டுடன் ஆதார் கார்டை இணைத்துவிடலாம்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!