தமிழகத்தில் DEE தேர்வு முடிவுகள் நவ.29ம் தேதி வெளியீடு – மறுகூட்டல் விண்ணப்பிக்க டிச.4 கடைசி நாள்!
தமிழகத்தில் தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வானது கடந்த மாதம் நடைபெற்றது. தற்போது அதற்கான தேர்வு முடிவுகள் வரும் நவ.29ம் தேதி காலை 11 மணியளவில் வெளியிடப்படும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தேர்வு முடிவுகள்:
தமிழகத்தில் கடந்த ஆண்டு பரவிய கொரோனா பெருந்தொற்றின் காரணமாக அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. அதனை தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மூலம் பயிற்சி பெற்று வரும் முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு தொடக்க கல்வி பட்டயத்தேர்வு நடைபெற்றது. தற்போது தொடக்க கல்வி பட்டயத் தேர்வு எழுதிய மாணவ மாணவியருக்கும், தனித்தேர்வர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதி அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
வேகமாக பரவும் புதிய வகை கொரோனா வைரஸ் ‘ஒமிக்ரான்’ – எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!
அதன்படி வரும் நவம்பர் 29ம் தேதி காலை 11 மணியளவில் மாணவர்கள் அவரவர் பயின்ற ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் மூலம் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என்றும், தனித்தேர்வர்கள் விண்ணப்பத்தை சமர்ப்பித்த மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் மூலம் தெரிந்துகொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து விடைத்தாள் நகல் பெற மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் www.tn.dge.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
தமிழகத்தில் டிச.3ம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
மேலும் பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து (விடைத்தாள் நகல் ஒரு பாடத்திற்கு கட்டணம் ரூ.275, மறுகூட்டல் ஒரு பாடத்திற்கு ரூ.205) விண்ணப்பத்தினை குறிப்பிட்டுள்ள தொகையுடன் சம்மந்தப்பட்ட மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் ஒப்படைக்க வேண்டும். விண்ணப்பத்தை டிச.1 காலை 10 மணி முதல் டிச.4ம் தேதி மாலை 5 மணிக்குள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறது. தபால் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.