தமிழகத்தில் டிச.3ம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் டிசம்பர் 3ம் தேதி கோட்டாறு புனித சவேரியார் பேராலயத் திருவிழாவை முன்னிட்டு அன்றைய தினம் அம்மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் விடுமுறை:
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு நிகழ்விற்கு அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படும். அந்த வகையில் தற்போது கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டாறு புனித சவேரியார் பேராலயத்தில் டிசம்பர் 3ம் தேதி திருவிழா நடைபெறவுள்ளது. இந்த பேராலயம் புகழ்பெற்ற கிறிஸ்தவ கத்தோலிக்க தேவாலயமாகும். இந்த கோவில் திருவிழா ஆண்டுதோறும் நவம்பர் கடைசி தேதியில் தொடங்கி டிசம்பர் முதல் வாரம் வரை நடைபெறும்.
தமிழகத்தில் ரேஷன் பொருட்கள் இனி கிடையாது? அரசு எடுக்கப்போகும் அதிரடி முடிவு!
மற்ற ஆண்டுகளை தொடர்ந்து நடப்பு ஆண்டும் திருவிழா நடைபெறவுள்ளது. கடந்த வாரம் கொடியேற்றம் வெகு சிறப்பாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து அதனால் டிசம்பர் 3ம் தேதி திருவிழா நடைபெறவுள்ளது. திருவிழாவை முன்னிட்டு அம்மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அன்றைய தினம் அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்ய டிசம்பர் 11-ம் தேதி வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.