தமிழகத்தில் ரேஷன் பொருட்கள் இனி கிடையாது? அரசு எடுக்கப்போகும் அதிரடி முடிவு!
தமிழகத்தில் வருமான வரி செலுத்துபவர்களுக்கு ரேஷன் பொருட்கள் விநியோகம் நிறுத்தப்பட போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரேஷன் அட்டைதாரர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ரேஷன் கடை:
தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் மலிவு விலையில் அரிசி, பருப்பு, சர்க்கரை, சமையல் எண்ணெய், போன்ற பொருட்கள் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் விதிக்கப்பட்ட ஊரடங்கு காலத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச மளிகை தொகுப்பு, கொரோனா நிவாரண தொகை போன்றவைகள் வழங்கப்பட்டது. மேலும் இனிமேல் ரேஷன் கடைகளில் பனை வெல்லம் மற்றும் பயிறு வகைகளும் வழங்கப்படும் என்று மானிய கோரிக்கை விவாதத்தின் போது தெரிவிக்கப்பட்டது.
சபரிமலை தரிசனம் செல்வோர்க்கு முக்கிய அறிவிப்பு – கொரோனா சோதனை தேவையில்லை!
அதனை தொடர்ந்து ஆவின் நெய் உட்பட 20 வகையான பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வருமான வரி செலுத்துபவர்களுக்கு ரேஷன் பொருட்களை விநியோகம் நிறுத்தப்பட போவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆண்டு வருமானம் 5 லட்சத்துக்கு குறைவாக உள்ளவர்களுக்கு மட்டுமே பொருட்கள் வழங்க அரசு திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் வருமான வரித்துறை உணவு வழங்கல் துறையினரிடம் ரேஷன் அட்டைதாரர்களின் ஆதார் உள்ளிட்ட விவரங்களை சேகரித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இதற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ரேஷன் விநியோக திட்டம் அனைவருக்குமான பொது விநியோக திட்டம் ஆகும்.இதில் வருமானத்தின் அடிப்படையில் பயனாளிகளின் எண்ணிக்கையை குறைத்து அனைவருக்குமான பொது விநியோகத் திட்டத்தின் நோக்கத்தையே சீர்குலைக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டு வருவதாக குடம் சாட்டியுள்ளார். மேலும் அரசு செலவினங்களை குறைப்பதற்காக பொது விநியோக திட்டத்தை மாற்றுவதாக கூறியுள்ளார்.