டிசம்பர் 30ம் தேதி உள்ளூர் விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!
உலகப்புகழ் பெற்ற நடராஜர் ஆலயத்தில் ஆருத்ரா தரிசன விழா நடைபெற உள்ளதால் வரும் டிசம்பர் 30ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்து உள்ளார். இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
உள்ளூர் விடுமுறை:
கொரோனா ஊரடங்கு காரணமாக கோவில்கள் பல மாதங்களாக மூடப்பட்டு இருந்த நிலையில், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு உட்பட்டு மீண்டும் திறக்கப்பட்டது. இதனால் சிறப்பு வழிபாடுகள், ஆராதனைகள் நடைபெற்று வருகிறது. தற்போது கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் நடராஜர் கோவில் விழாக்கோலம் பூண்டுள்ளது. திருவாதிரை பண்டிகை நாள் என்பதால் தேரோட்டம் நடைபெற்று வருகிறது. மேலும் வருகின்ற 30ம் தேதி ஆருத்ரா தரிசனம் நடைபெற உள்ளது.
ஜேஇஇ தேர்வின் புதிய மாற்றங்கள் – தேசிய தேர்வு முகமை விளக்கம்!!
கொரோனா அச்சம் காரணமாக இவ்விழாவுக்கு முதலில் வெளிமாவட்ட பக்தர்கள் வர அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டது. பின்னர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதால் முகக்கவசம், தனிமனித இடைவெளி உள்ளிட்ட விதிமுறைகளை பின்பற்றி ஒரு மணிநேரத்திற்கு 200 வெளிமாவட்ட பக்தர்களை அனுமதிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து அரசு முடிவெடுக்காதது ஏன்?? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!!
இதற்கிடையில் டிசம்பர் 30ம் தேதி நடைபெற உள்ள ஆருத்ரா தரிசனம் காரணமாக கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்து உள்ளார். இதனால் அன்று பள்ளி, கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டு உள்ளது.
உள்ளூர் விடுமுறை தேவையற்றது. இதற்கு இன்னொரு தினம் வேலை பார்க்க வேண்டும். தேவை உள்ளவர்கள் விடுமுறை அளிக்க பட்டால் போதும்.