தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து அரசு முடிவெடுக்காதது ஏன்?? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!!
நாட்டின் பிற மாநிலங்களில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ள நிலையில், தமிழகத்தில் மட்டும் இன்னும் அது குறித்து அரசு முடிவெடுக்காததன் காரணத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும் பள்ளி மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டில் பொதுத்தேர்வுகள் கட்டாயம் நடைபெறும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
பள்ளிகள் திறப்பு:
தமிழகத்தில் இதுவரை 8,14,170 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ள நிலையில் 12,069 பேர் உயிரிழந்து உள்ளனர். தற்போது பாதிப்பு சற்று குறைந்துள்ள நிலையில் ஊரடங்கில் மேலும் தளர்வுகள் வழங்குவது குறித்து முதல்வர் இன்று ஆலோசனை நடத்தினார். இதற்கிடையில் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு மற்றும் பொதுத்தேர்வுகள் குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம் அளித்துள்ளார்.
யோகா & இயற்கை மருத்துவ படிப்புகளுக்கு கலந்தாய்வு தேதி – முக்கிய அறிவிப்பு!!
கொரோனா ஊரடங்கு காரணமாக 8 மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ள நிலையில், பள்ளிகள் திறப்பு குறித்து அரசு உறுதியாக தற்போது வரை முடிவெடுக்காமல் உள்ளது. இதற்கு காரணம், பிற மாநிலங்களில் ஊரடங்குக்கு மத்தியில் பள்ளிகளை திறந்து பின்னர் மூடி உள்ளனர். கொரோனா பரவல் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதனால் தான் தமிழக அரசு இதுவரை பள்ளிகள் திறப்பில் அவசரப்படாமல் உள்ளது என செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக அரசுப்பள்ளி பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் – கல்வித்துறை முக்கிய முடிவு!!
மேலும் 10,11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கண்டிப்பாக நடப்பு கல்வியாண்டில் பொதுத்தேர்வுகள் நடைபெறும் என கூறிய அமைச்சர், அதற்கான கால அட்டவணை முதல்வருடன் ஆலோசித்த பிறகு வெளியிடப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
When you open the school please quick to reopen the school