தமிழகத்தில் டிச.19 தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
தேனியில் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாவட்ட ஊரக மற்றும் நகர்ப்புற இயக்கம் ஆகியவை இணைந்து 19.12.2021 அன்று ஞாயிற்றுக் கிழமை மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்த உள்ளனர்.
வேலைவாய்ப்பு முகாம்:
தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு முன்பு மக்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் நோக்கில் அரசு அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் மாவட்ட நிர்வாக அனுமதியுடன் தனியார் துறைகள் அவ்வப்போது வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வந்தனர். கடந்த 2020ம் ஆண்டு பரவிய கொரோனா பரவலால் விதிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக இந்த தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் ரத்து செய்யப்பட்டது. தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் குறைந்ததை அடுத்து அரசு பொதுமக்களின் நலன் கருதி படிப்படியாக ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்து வருகிறது.
TCS நிறுவனத்தில் இளங்கலை பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு – முழு விவரம் இதோ!
அதனால் மக்கள் மீண்டும் இயல்பு நிலை நோக்கி திரும்பி வருகின்றனர். இந்த நிலையில் அரசு தளர்வுகளின் ஒரு பகுதியை தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்த அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து அனைத்து மாவட்டங்களில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்கள் தவறாது நடைபெற்று வருகிறது. மற்ற மாவட்டங்களை தொடர்ந்து வரும் டிசம்பர் 19ம் தேதி தேனி மாவட்டத்தில் உள்ள அரசு ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் தொழில் நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாவட்ட ஊரக மற்றும் நகர்ப்புற இயக்கம் ஆகியவை இணைந்து தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்த உள்ளனர்.
TNPSC குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கு CBIக்கு மாற்றம் – உயர்நீதிமன்ற கிளை முக்கிய உத்தரவு!
இந்த மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் காலை 8.00 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். இம்முகாமில் கலந்து கொள்ள விரும்புவோர் குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், கல்வி சான்றிதழ்களின் நகல் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும். மேலும் வேலைவாய்ப்பு முகாம் தொடர்பான கூடுதல் தகவகளுக்கு [email protected] அல்லது மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தொலைபேசி எண் 04546 254510 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு அறியலாம் என்று அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.