TCS நிறுவனத்தில் இளங்கலை பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு – முழு விவரம் இதோ!
தற்போது டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனம் அனைத்து இளங்கலை பட்டப்படிப்பு முடித்த மாணவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.
வேலை வாய்ப்பு
இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப (IT) நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) தனது வணிக செயல்முறை சேவை (BPS) பிரிவில் புதிய பட்டதாரிகளை பணியமர்த்த இருப்பதாக அறிவித்துள்ளது. அந்த வகையில் BCOM, BBA, BBI, BAF, BA, BMS, BBM, BCA, BCS மற்றும் 2021ம் கல்வியாண்டில் பட்டப்படிப்பு முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல கலை, அறிவியல், வணிக பிரிவை சேர்ந்த பட்டபடிப்புகளை முடித்திருக்கும் மாணவர்களும் இப்பணிக்கு விண்ணப்பம் செய்ய தகுதியுடையவர்கள் ஆவர்.
ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – ‘மேரா ரேஷன்’ செயலி அறிமுகம்! முழு விபரம் இதோ!
இதற்கான விண்ணப்ப படிவங்கள் TCS நிறுவனத்தின் tcs.com/careers என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்ப படிவங்களை வரும் 2022ம் ஆண்டு ஜனவரி 7ம் தேதிக்குள் அனுப்பி வைக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பணிக்கான முதல் கட்ட தேர்வு தேர்வு ஜன.26ம் தேதியுடன் துவங்கி, நேர்காணல் மூலம் முடிவடையும். இந்த தேர்வுக்கான காலம் 60 வினாடிகள். இத்தேர்வு முடிந்ததும் நேர்காணல் குறித்து தேர்வர்களுக்கு பின்னர் அறிவிக்கப்படும்.
TNPSC குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கு CBIக்கு மாற்றம் – உயர்நீதிமன்ற கிளை முக்கிய உத்தரவு!
இப்போது TCS நிறுவனத்தின் புதிய பணிக்கு https://nextstep.tcs.com/campus/#/ மூலம் தங்களது விண்ணப்பதாரர்கள் படிவங்களை சமர்ப்பிக்கலாம். இந்த செயல்முறையின் போது விண்ணப்பதாரர்கள் தங்களது சுய விவரங்கள் மற்றும் கல்வி விவரங்களை சரியாக பதிவு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக, விண்ணப்பதாரர்களுக்கு 2 வருடத்திற்கும் மிகாமல் எத்தகைய கல்வி இடைவெளியும் இருக்கக்கூடாது. இந்த தேர்வு செயல் முறையை வெற்றிகரமாக முடிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு பணியிடம் குறித்த முடிவுகளை TCS எடுக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.