TNPSC குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கு CBIக்கு மாற்றம் – உயர்நீதிமன்ற கிளை முக்கிய உத்தரவு!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்திய குரூப் 4 தேர்வில் முறைகேடுகள் ஏற்பட்டதாக தொடரப்பட்ட வழக்கை சிபிஐக்கு மாற்றம் செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
தேர்வு முறைகேடு
தமிழக அரசுத்துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) போட்டித்தேர்வுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த 2019ம் ஆண்டு கிராம நிர்வாக அலுவலர், வரிதண்டலர் உள்ளிட்ட 7 பதவிகளுக்காக நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வில் சில முறைகேடுகள் ஏற்பட்டதாக கூறி வழக்கு தொடரப்பட்டது. அதாவது 2019ம் ஆண்டு நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வை 16 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் எழுதி இருந்தனர்.
Post Office சேமிப்பு கணக்கினை ஆன்லைனில் ஓபன் செய்வது எப்படி? எளிய வழிமுறைகள் இதோ!
இந்த தேர்வு முடிவில் ராமநாதபுரம், ராமேஸ்வரம், கீழக்கரை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகளவு முன்னிலை வகித்திருந்தனர். இதன் மூலம் அக்குறிப்பிட்ட பகுதிகளை சேர்ந்த தேர்வு மையங்களில் முறைகேடு ஏற்பட்டிருக்கலாம் என புகார்கள் எழுந்த நிலையில், இந்த வழக்கை TNPSC விசாரித்து வந்தது. பின்னர் இந்த குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.
தமிழகத்தில் டிச.15 முதல் அமலுக்கு வரும் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் – முழு விபரம் இதோ!
இந்த சிபிசிஐடி விசாரணையில் குரூப் 4 தேர்வில் சிலர் முறைகேடு நடந்திருப்பதாக கூறி, 115 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் மீண்டுமாக TNPSC குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பான வழக்கு சிபிசிஐடி இடம் இருந்து சிபிஐக்கு மாற்றம் செய்யப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை குரூப் 4 தேர்வு முறைகேடு வழக்கை சிபிஐக்கு மாற்றம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.