தமிழகத்தில் டிச.15 முதல் அமலுக்கு வரும் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் – முழு விபரம் இதோ!

0
தமிழகத்தில் டிச.15 முதல் அமலுக்கு வரும் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் - முழு விபரம் இதோ!
தமிழகத்தில் டிச.15 முதல் அமலுக்கு வரும் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் - முழு விபரம் இதோ!
தமிழகத்தில் டிச.15 முதல் அமலுக்கு வரும் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் – முழு விபரம் இதோ!

தமிழகத்தில் முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு அறிவிப்பு டிசம்பர் 15ம் தேதியான நாளையுடன் முடிவுக்கு வரும் நிலையில், நேற்று தமிழக முதல்வர் தமிழகத்தில் ஊரடங்கு கபடுபாடுகளை டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.

ஊரடங்கு உத்தரவு:

தமிழகத்தில் கொரோனா தொற்று 2ம் அலை பரவல் அதிகரித்து வந்த காரணத்தால் முதலில் கடந்த மே மாதம் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. ஊரடங்கு காலத்தில் மக்களின் பொது நடவடிக்கைகள் மற்றும் போக்குவரத்திற்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதனால் அனைத்து தொழில்துறைகளும் பாதிப்படைந்தது. தொடர்ந்து தீவிர கட்டுப்பாடுகளின் விளைவினால் தொற்று பரவல் தமிழகத்தில் கட்டுக்குள் வரத்தொடங்கியது. இதனால் தொற்று நிலவரத்திற்க்கு ஏற்ப மாவட்ட வாரியாக தளர்வுகள் அளிக்கப்பட்டது. தொற்று பரவல் அதிகம் உள்ள மாவட்டங்களில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க அனுமதி அளிக்கப்பட்டது.

இந்தியாவில் 44 பேருக்கு ஓமைக்ரான் கொரோனா தொற்று உறுதி – பொதுமக்கள் அச்சம்!

மேலும், கடந்த செப்டம்பர் மாத ஆரம்பத்தில் இருந்து தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று நிலை சீரடைந்து இயல்பு நிலை திரும்ப தொடங்கியது. இதனால் செப்டம்பர் 1ம் தேதி 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும், நவம்பர் 1ம் தேதி 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து வருகிறது. இந்நிலையில், முன்னதாக அறிவித்திருந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் டிசம்பர் 15ம் தேதியான நாளையுடன் முடிவுக்கு வருகிறது. மேலும், பண்டிகை காலமாக உள்ளது, இதனால் மக்கள் அதிக அளவில் கூட்டம் கூடுவார்கள் மற்றும் அண்டை மாநிலங்களில் கொரோனாவின் உருமாறிய வைரஸ் வகையான ஓமைக்ரான் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழகத்தில் நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கையாக டிசம்பர் 31ம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீடிக்கப்படுவதாக முதல்வர் நேற்று அறிவித்துள்ளார்.

புதிய வழிகாட்டுதல்கள்:

  • சமுதாய, கலாச்சார, அரசியல் கூட்டங்கள் போன்ற பொது மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தற்போது நடைமுறையிலுள்ள தடை தொடரும்.
  • கொரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், 31.12.2021 மற்றும் 1.1.2022 ஆகிய நாட்களில் அனைத்து கடற்கரைகளிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.
  • ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் உரிய கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து அனுமதிக்கப்படும்.
  • அனைத்து நீச்சல் குளங்களும் செயல்பட அனுமதிக்கப்படும்.
  • அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் அனைத்திற்கும் கூட்ட அரங்குகள் பயன்படுத்த அனுமதிக்கப்படும்.
  • 03.01.2022 முதல் அனைத்து உயர்நிலை / மேல்நிலை பள்ளிகளிலும் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகள், அனைத்து கல்லூரிகள் மற்றும் தொழில்நுட்ப பயிற்சி நிறுவனங்கள் சுழற்சி முறை இன்றி இயல்பாக செயல்படும்.

அரசு ஊழியர்களுக்கு ஷாக் அறிவிப்பு – ஊழல் புகார் தெரிவிக்க ஆன்லைன் சேவை அறிமுகம்!

  • கடைகளில் பணிபுரிபவர்களும், வாடிக்கையாளர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிவதை சம்பந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.
  • அனைத்து கடைகளும், குளிர்சாதன வசதி இல்லாமல் செயல்படுவதோடு, கடைகளில், சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் ஒரே நேரத்தில் அதிகப்படியான நபர்களை அனுமதிக்கக்கூடாது.
  • கடைகளின் நுழைவு வாயிலில் பொது மக்கள் வரிசையில் காத்திருக்கும் போது, ஒரு நபருக்கும் மற்றொருவருக்கும் இடையே போதுமான இடைவெளி இருக்கும் வகையில் குறியீடுகள் போடப்பட வேண்டும்.
  • நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட வேண்டும். இந்த நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில், மருத்துவ அவசர சேவைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்குதல் தவிர, இதர செயல்பாடுகள் அனுமதி இல்லை.
  • நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில், தீவிரமாக நோய்த் தொற்று பரவலை, வீடு வீடாக கண்காணிக்க குழுக்கள் அமைத்து கண்காணிக்கப்படும்.
  • கொரோனா நோய்த் தொற்று கட்டுப்பாடு நடைமுறைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, விதிமீறல்களில் ஈடுபடுபவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!