1 முதல் 7ம் வகுப்புகளுக்கு டிசம்பர் 15 வரை பள்ளிகள் மூடல் – ஓமைக்ரான் அச்சம் எதிரொலி!
மகாராஷ்டிராவில் உள்ள அனைத்து பள்ளிகளும் ஓமைக்ரான் வைரஸ் தாக்குதல் காரணமாக பள்ளிகளில் 1 முதல் 7ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகளை நடத்துவதை தடை செய்துள்ளது. இதனால் இன்று முதல் ஆன்லைன் வகுப்புகள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் மூடல்:
கொரோனா தொற்றின் 2ம் அலை பாதிப்பு அதிகமாக பாதித்த மாநிலங்களில் மஹாராஷ்டிரா மாநிலமும் ஒன்றாகும். தீவிர கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் சமீபத்தில் தான் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கியது. ஆனால் தற்போது புதிய அச்சுறுத்தலாக ஓமைக்ரான் தொற்று பாதிப்பு பரவி வருகிறது. மீண்டும் நிலைமை மோசமாகாமல் தடுக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில், முதல் கட்டமாக மாணவர்களின் நலன் கருதி பள்ளிகள் மூடப்பட்டுள்ளது.
மத்திய அரசு நிறுவனத்தில் வேலை 2021 – டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!!!
மும்பையில் 1 முதல் 7 ஆம் வகுப்புகளுக்கு டிசம்பர் 1, 2021 முதல் டிசம்பர் 15, 2021 வரை பள்ளிகள் திறப்பதை அரசு தள்ளிவைத்துள்ளது. இது தொடர்பான உத்தரவு அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் சிவில் அமைப்பு தெரிவித்துள்ளது. முன்னதாக மாநிலத்தில் அக்டோபர் 4 முதல் 8 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் நடந்து வருகின்றது. குறிப்பிடத்தக்க வகையில், புனே மற்றும் நாசிக் பள்ளிகளுக்கும் இதேபோன்ற முடிவு வெளியிடப்பட்டுள்ளது.
ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – மேரா ரேஷன் செயலி அறிமுகம்! முக்கிய விவரங்கள் இதோ!
இருப்பினும், மகாராஷ்டிராவின் மற்ற பகுதிகளில் உள்ள அனைத்து பள்ளிகளும் டிசம்பர் 1 முதல், கிராமப்புறங்களில் 1 முதல் 5 வகுப்புகளுக்கும், நகர்ப்புறங்களில் 1-7 வகுப்புகளுக்கும், கோவிட் நெறிமுறைகளின் கண்காணிப்பின் கீழ் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும். அரசு அறிவிப்பின் படி மாணவர்கள் நேரடி வகுப்புகளில் கலந்து கொள்வதற்கு பெற்றோர்களின் அனுமதி கடிதம் அவசியமாகும். மேலும், மாணவர்கள் அனைவரும் அனைத்து நேரங்களிலும் தகுந்த கொரோனா நோய் தடுப்பு விதிமுறைகளை கடைபிடிக்கும் படி அறிவுறுத்தப்படுகிறார்கள்.