அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 13% உயர்வு – 5வது ஊதியக்குழு அறிக்கை!
மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 5வது ஊதியக் குழுவின் கீழ் 13 சதவீதமாகவும், அகவிலை நிவாரணம் 3 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.
அகவிலைப்படி உயர்வு:
லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சி அளிக்க கூடிய வகையில் 5வது ஊதியக் குழு மற்றும் 6வது ஊதியக் குழுவின் கீழ் உள்ளவர்களுக்கு அகவிலைப்படி (டிஏ) மற்றும் அகவிலை நிவாரணம் (டிஆர்) அறிவிப்பு வந்துள்ளது. இந்திய அரசு கடந்த மாதம் 7வது ஊதியக் குழுவின் கீழ் ஊழியர்களுக்கு 3% DA உயர்வை அறிவித்ததைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. சமீபத்திய அறிவிப்பின்படி, 5வது ஊதியக் குழுவின் கீழ் மத்திய அரசு ஊழியர்களின் DA 13% அதிகரித்துள்ளது.
மீண்டும் அதிகரிக்கும் கொரோனா, முழு ஊரடங்கு அமல்? பொதுமக்கள் அச்சம்!
ஊழியர்கள் இப்போது 5வது ஊதியக் குழுவின் கீழ் 368 சதவீதத்தில் இருந்து 381 சதவீத விகிதத்தில் டிஏவைப் பெறுவார்கள். மேலும், 6வது ஊதியக் குழுவின் கீழ் ஊழியர்களின் டிஏ 196 இல் இருந்து 203 சதவீதமாக அதிகரித்துள்ளது. மத்திய அரசு மற்றும் மத்திய தன்னாட்சி அமைப்புகளில் (பொதுத் துறை நிறுவனங்கள்) பணிபுரியும் ஊழியர்களுக்கான திருத்தப்பட்டவை, ஜனவரி 1, 2022 முதல் மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. 01.01.2022 முதல் 5வது மத்திய ஊதியக் குழுவின்படி, மத்திய அரசு மற்றும் மத்திய தன்னாட்சி அமைப்புகளின் ஊழியர்களுக்கான அகவிலைப்படியின் திருத்தப்பட்ட விகிதங்கள், 5வது மத்திய ஊதியக் குழுவின்படி முன் திருத்தப்பட்ட தர ஊதியத்தில் தொடர்ந்து ஊதியம் பெறுகின்றன என்று செலவினத் துறை குறிப்பிட்டது.
மத்திய அரசு சமீபத்தில் ஓய்வூதியதாரர்களின் டிஆர் முந்தைய 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக மாற்றியமைத்துள்ளது. DR உயர்வு ஜனவரி 1, 2022 முதல் அமலுக்கு வருகிறது. 7வது ஊதியக் குழுவின் கீழ் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 28 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தி, ஜனவரி 1, 2022 முதல் அமலுக்கு வருகிறது. ஆயுதப்படை ஓய்வூதியம் பெறுவோர், பாதுகாப்பு சேவையில் இருந்து ஊதியம் பெறும் சிவில் ஓய்வூதியம் பெறுவோர், அகில இந்திய சேவை ஓய்வூதியம் பெறுவோர், ரயில்வே ஓய்வூதியம் பெறுவோர் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் உள்ளிட்ட பிற பணியாளர்கள் பலன்களைப் பெறுவார்கள்.