மீண்டும் அதிகரிக்கும் கொரோனா, முழு ஊரடங்கு அமல்? பொதுமக்கள் அச்சம்!

0
மீண்டும் அதிகரிக்கும் கொரோனா, முழு ஊரடங்கு அமல்? பொதுமக்கள் அச்சம்!
மீண்டும் அதிகரிக்கும் கொரோனா, முழு ஊரடங்கு அமல்? பொதுமக்கள் அச்சம்!
மீண்டும் அதிகரிக்கும் கொரோனா, முழு ஊரடங்கு அமல்? பொதுமக்கள் அச்சம்!

கடந்த சில வாரங்களாக தான் இந்தியாவில் கொரோனா பரவல் குறைய ஆரம்பித்தது. இந்நிலையில் மீண்டும் இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனால் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்படுமா என மக்கள் பீதியில் உள்ளனர்.

ஊரடங்கு:

உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனா தொற்று அதிகமாக இருந்தது. கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு பல லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்க அரசும் பலவிதமான நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அதாவது பொது இடங்களில் அவசியமில்லாமல் பொது மக்கள் நடமாட வேண்டாம் எனவும், அப்படி பொது இடங்களுக்கு செல்லும்போது கண்டிப்பாக மாஸ்க் அணிந்து தான் செல்ல வேண்டும் எனவும், பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் அரசு கோரிக்கை விடுத்திருந்தது.

தமிழகத்தில் பள்ளிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை – ஆசிரியர்கள் முக்கிய கோரிக்கை!

மேலும் கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க கண்டிப்பாக பொதுமக்கள் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ளும் படியும் அறிவுறுத்தப்பட்டது. பெரும்பாலும் அனைத்து பொதுமக்களும் அரசின் கட்டுப்பாடுகளை மதித்து நடந்தனர். இதனால் தற்போது சில மாதங்களாகவே கொரோனா தொற்று குறைந்து வந்தது. ஆனால் சீனா உள்ளிட்ட சில நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கத் துவங்கியுள்ளது. பிரிட்டனில் XE என்னும் புதிய வகை கொரோனா வைரஸும் பரவிக்கொண்டிருக்கிறது. இந்தியாவில் கூட சமீபத்தில் ஒருவருக்கு XE என்னும் வகை வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது இந்தியாவிலும் கொரோனா பரவல் கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது.

நேற்று முன்தினம் மட்டுமே இந்தியாவில் 949 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிலும் தலைநகர் டெல்லியில்தான் கொரோனா அதிகமாக பரவிக்கொண்டிருக்கிறது. டெல்லியில் மட்டுமே புதிதாக 325 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 1 அன்று டெல்லியில் கொரோனா தொற்று பரவல் 0.57 சதவீதமாக இருந்தது. ஆனால் தற்போது 2.39 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதனால் மீண்டும் ஊரடங்கு அறிவிக்கப்படுமா என மக்கள் பீதியில் உள்ளனர். மேலும் மீண்டும் கொரோனா பரவிவரும் காரணத்தினால் மீண்டும் பள்ளிகள் மூடப்படுமா என கேள்வி எழுந்த நிலையில் அதற்கு துணை முதல்வர் பதிலளித்துள்ளார். அதாவது மாணவர்கள் ஆசிரியர்கள் அனைவரும் பாதுகாப்புடன் இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளார். மேலும் தேவைப்பட்டால் பள்ளிகள் மூட வேண்டிய சூழல் ஏற்படும் எனவும் அறிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!