அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் ஜூலை 21 வரை காலக்கெடு நீட்டிப்பு! இதற்காக தான்?

0
அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் ஜூலை 21 வரை காலக்கெடு நீட்டிப்பு! இதற்காக தான்?
அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் ஜூலை 21 வரை காலக்கெடு நீட்டிப்பு! இதற்காக தான்?
அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் ஜூலை 21 வரை காலக்கெடு நீட்டிப்பு! இதற்காக தான்?

மாநிலம் முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 2 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு தடையில்லாமல் இலவச கல்வி வழங்கும் திட்டத்தை மாநில அரசாங்கம் செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்வதற்கான காலக்கெடு தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.

காலக்கெடு நீட்டிப்பு

இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்று காலத்திற்கு பிற்பாடு பள்ளிக்கு செல்லும் குழந்தைகளின் இடைநிற்றல் அதிகரித்துள்ளதாக ஆய்வுத்தகவல்கள் கூறுகிறது. இந்த நிலையில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் தடையில்லாமல் கல்வியை பெறுவதற்காக ஹரியானா மாநில அரசாங்கம் ஒரு முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது. அந்த வகையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பை சேர்ந்த 2 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இலவசக்கல்வி வழங்குவதற்கான திட்டத்தை மாநில அரசாங்கம் ஜூலை 21 வரை நீட்டித்துள்ளது.

Exams Daily Mobile App Download

அதன்படி மாநிலக் கல்வித்துறையானது இதுவரை நான்காவது முறையாக இந்த காலக்கெடுவை நீட்டித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த பள்ளிக் கல்வி இயக்குநரகத்தின் புதிய அறிவிப்பின்படி, ‘மாவட்ட அதிகாரிகள் ஆர்வமுள்ள ஏழை குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களிடமிருந்து ஜூலை 21ம் தேதி வரை விண்ணப்பங்களை பெறுவார்கள்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது ஹரியானா கல்வி விதிகளின் 134A விதியின் மறுவடிவமைப்பான CM ஹரியானா சம கல்வி நிவாரணம், உதவி மற்றும் மானியம் (CHEERAG) திட்டம் ஏப்ரல் மாதம் தொடங்கப்பட்டது.

தமிழகத்தில் ITI தேர்ச்சி பெற்றவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!

அதன்படி மாநிலத்தில் உள்ள மொத்த தனியார் பள்ளிகளில் 5% மற்றும் குர்கானில் உள்ள மூன்று பள்ளிகள் மட்டுமே இந்தத் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு இலவச கல்வியை வழங்க ஆர்வம் காட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தொடக்கக் கல்வித் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘ஏப்ரல் முதல் இந்தத் திட்டத்தை நாங்கள் மாணவர்கள் முன்வைத்து வருகிறோம். அதன்படி மாவட்ட அதிகாரிகள் இத்திட்டத்தை பள்ளிகளில் நடைமுறைக்குக் கொண்டுவர முயற்சித்தார்கள். ஆனால், இந்தத் திட்டத்துடன் இணைக்கப்பட்ட சட்டப்பூர்வக் கடமையை அரசாங்கம் நீக்கியதால், பள்ளிகள் பொதுமக்களுக்கு சேவை செய்ய ஆர்வம் காட்டவில்லை’ என்று கூறியுள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!