தமிழகத்தில் ITI தேர்ச்சி பெற்றவர்கள் கவனத்திற்கு – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
தமிழகத்தில் ITI பயிற்சி பெற்று வருபவர்கள் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற விரும்பும் மாணவர்களுக்கு அரசு தேர்வுத்துறை இயக்ககம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பான விரிவான தகவல்களை பார்ப்போம்.
தேர்வுத்துறை இயக்ககம்
தமிழகத்தில் 8ம் வகுப்பு அத்துடன் NTC/NAC+ LANGUAGE முடித்தவர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று அதனுடன் NTC/NAC+ LANGUAGE முடித்துள்ளவர்கள் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களாக கருதப்படுவார்கள் என்று தமிழக அரசு அரசாணையில் குறிப்பிட்டுள்ளது. தற்போது 10ம் மற்றும் 12ம் வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு துணைத்தேர்வுகள் நடைபெற உள்ளது. இது குறித்த அரசாணையில், 12ம் வகுப்பு துணைத்தேர்வு வருகிற ஜூலை 25 முதல் ஆகஸ்ட் 1ம் தேதி வரை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இதே போல் 11ம் வகுப்பு துணைத்தேர்வு வருகிற ஆகஸ்ட் 2ம் தேதி முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து 10ம் வகுப்பு துணைத்தேர்வு வருகிற 25 முதல் ஆகஸ்ட் 8ம் தேதி வரை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது ITI போன்ற தொழிற்பயிற்சி நிறுவனங்களில் பயிற்சி பெற்று வருபவர்களில் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புக்கு இணையாக சான்றிதழ் பெற விரும்புவர்களுக்கு அரசு தேர்வுத்துறை இயக்ககம் அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் நாளை முதல் கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை ஆய்வு மையம் அறிக்கை!
இந்த அரசாணையில், தமிழகத்தில் ITI பயிற்சி பெற்ற மாணவர்கள் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பிற்கு இணையாக சான்றிதழ் பெற மொழிப்பாடங்களில் தேர்ச்சி பெற வேண்டும். அதன்படி இவர்கள் இன்று முதல் 18ம் தேதி வரை மாவட்ட அரசு தேர்வுத்துறை அலுவலகத்திற்கு சென்று தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழிப்பாடத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இதனை அனைத்து அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி முதல்வர்கள் மற்றும் மாவட்ட திறன் பயிற்சி உதவி இயக்குனர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.