தமிழ்நாடு சிறுபான்மையினர் நல அலுவலக வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!
தருமபுரி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள துப்புரவு பணியாளர் பணிக்கான காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- மேலே குறிப்பிட்டுள்ள பகுதி நேர துப்புரவு பணியாளர் பதவிக்கு என 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.
- மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம் தர்மபுரி ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர் 01-07-2022 தேதியின்படி குறைந்தபட்ச வயது 18 மற்றும் அதிகபட்சம் 34 வயதுடையவராக இருக்க வேண்டும். அரசு விதிகளின் படி, வயது வரம்பில் தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
- இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்களுக்கு தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். இந்த பணிக்கு ஆண் விண்ணப்பதார்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
- மேற்கண்ட பகுதி நேர வேலைக்கு துப்புரவு பணியாளர்கள் தொகுப்பூதிய அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். மாதம் தொகுப்பூதியமாக ரூ.3000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.
- தமிழக அரசின் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் உள்ள இந்த பகுதி நேர துப்புரவு பணியாளர் பதவிக்கு விண்ணப்பதார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 25.07.2022 ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.