தமிழகத்தில் நாளை மறுநாள் (ஜூலை 11) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – காரணம் இதோ!
தமிழகத்தில் உள்ள நெல்லையப்பர் கோயிலில் ஆனிப் திருவிழாவின் முக்கிய அம்சமாக வரும் ஜூலை 11ம் தேதி( நாளை மறுநாள்) தேரோட்டம் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை குறித்த முக்கிய அறிவிப்பை நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு வெளியிட்டுள்ளார்.
மாவட்ட ஆட்சியர் உத்தரவு:
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்று சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோவில். இத்திருக்கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாவில் ஆனிப் பெருந்திருவிழா சிறப்பு வாய்ந்தது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக ஆனித்திருவிழா நடைபெறவில்லை. இந்த ஆண்டு தொற்று குறைந்ததால் வழக்கம் போல தேர்த் திருவிழாவை காண பக்தர்கள் ஆர்வமாக உள்ளனர். மேலும் ஆனிப் பெருந்திருவிழாவையொட்டி கடந்த 3ம் தேதி கொடியேற்றப்பட்டு 10 நாட்கள் திருவிழா தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 11-ந் தேதி( நாளை மறுநாள்) நடைபெற உள்ளது.
Exams Daily Mobile App Download
மேலும் விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரர், காந்திமதி அம்மன் மற்றும் சுவாமி நெல்லையப்பர் தேர்களை தயார்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து தேர் திருவிழா அன்று உள்ளூர் விடுமுறை அளித்த மாவட்ட நிர்வாகம் திருவிழாவிற்கான முன்னேற்பாடு பணிகளை தீவிரமாக செய்து வருகிறது. இது தொடர்பாக நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நெல்லை டவுன் நெல்லையப்பர், காந்திமதி அம்மன் கோவிலில் ஆனித் தேரோட்டம் வருகிற 11-ந் தேதி (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது.
தமிழகத்தில் ஜூலை 12 மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின் வாரியம் அறிவிப்பு!
இதையொட்டி அன்றைய தினம் நெல்லை மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும், அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது. மேலும் அன்றைய தினம், அரசு பொதுத்தேர்வுகள் ஏதும் இருந்தால், பொதுத் தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள், பொதுத் தேர்வு நடைபெறும் பள்ளிகள் மற்றும் பொதுத் தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறை பொருந்தாது.
இந்த உள்ளூர் விடுமுறை செலவாணி முறிச்சட்டத்தின் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், வங்கிகளுக்கு இந்த விடுமுறை பொருந்தாது. மேலும், மாவட்ட கருவூலம் மற்றும் அனைத்து சார்நிலைக் கருவூலங்களும் குறைந்தபட்ச பணியாளர்களை கொண்டு அரசு கோப்புகள் தொடர்பாக அவசர பணிகளை கவனிப்பதற்காக செயல்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் இந்த உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 23-ந் தேதி (சனிக்கிழமை) அன்று பணி நாளாக அறிவிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.