தமிழகத்தில் ஜூலை 12 மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின் வாரியம் அறிவிப்பு!
திருநெல்வேலி மாவட்டத்தில் ஜூலை 12ம் தேதி மானூர் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அத்துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது. தற்போது மின் தடை செய்யப்பட உள்ள பகுதிகள் குறித்து இப்பதிவில் காண்போம்.
மின்தடை:
தமிழகத்தில் தடையில்லா மின்சாரத்தை வழங்கும் நோக்கில் மாதந்தோறும் துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இந்த பராமரிப்பு பணிகளின் போது சேதமடைந்த மின் கம்பங்களை மாற்றுதல் வயர்களை சரி செய்தல், பழுதடைந்த மின் கம்பிகளை மாற்றுதல், மின் இணைப்புகளை சரி செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இத்தகைய பணிகள் நடைபெறும் போது மின் ஊழியர்கள் பாதுகாப்பிற்காக மின்தடை செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து அப்பகுதி செயற்பொறியாளர்கள் மூலம் மின் பயனர்களுக்கு முன்னறிவிப்பும் செய்யப்பட்டு வருகிறது. இதனை அறிந்து மின் பயனர்கள் மின் உதவியுடன் செய்யப்படும் வேலைகளை முன்னதாகவே முடித்து விடுகின்றனர்.
Exams Daily Mobile App Download
மற்ற மாவட்டங்களை தொடர்ந்து ஜூலை 12ம் தேதி நெல்லை மாவட்டம் கிராமப்புற மின் கோட்டத்திற்கு உட்பட்ட மானூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் மானூர், மாவடி, தெற்குப்பட்டி, களக்குடி, எட்டான்குளம், கானார் பட்டி, பிள்ளையார்குளம், குறிச்சிகுளம் ஆகிய பகுதிகள் மற்றும் வள்ளியூர் மின் கோட்டத்திற்கு உட்பட்ட களக்காடு, பணகுடி, களக்காடு பகுதிக்கு உட்பட்ட கோதைச்சேரி, சிங்கிகுளம், களக்காடு, காடுவெட்டி, வடமலைசமுத்திரம், கள்ளிகுளம், மீனவன் குளம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை – கனமழைக்கு எதிரொலி!
மேலும் தென்காசி மின் கோட்டத்திற்கு உட்பட்ட கருவேலன்குளம், கோவிலம்மாள்புரம் மற்றும் பக்கத்து கிராமங்கள், பணகுடி பகுதிக்கு உட்பட்ட பணகுடி, லெப்பை குடியிருப்பு, புஷ்பவனம், குமந்தான், காவல்கிணறு, சிவகாமிபுரம், தளவாய்புரம், பாம்பன்குளம், கலந்தப்பனை, கடம்பன்குளம் ஆகிய பகுதிகள் மற்றும் தென்காசி மின் கோட்டத்துக்கு உட்பட்ட மங்கம்மாள் சாலை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக தென்காசி புதிய பஸ்நிலையம், மங்கம்மாள் சாலை பகுதிகள், சக்திநகர், காளிதாசன் நகர், ஹவுசிங் போர்டு காலனி, கீழப்புலியூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் என்று அப்பகுதி மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
TNPSC Online Classes
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்