பொதுமக்களுக்கு ஆபத்து.. வேலைவாய்ப்பை தருவதாக உலா வரும் போலி தகவல்கள் – NIC எச்சரிக்கை!
தேசிய தகவல் மையத்தின் பெயரில் நடந்து வரும் மோசடி வேலைவாய்ப்பு விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கை அறிவிக்கையை தேசிய தகவல் மையம் தற்போது வெளியிட்டுள்ளது.
மோசடி வேலை:
நாளுக்கு நாள் நாட்டில் வேலை இல்லா திண்டாடட்டம் தான் அதிகரித்து வருகிறது. நாட்டின் முன்னேற்றம் என்பது வேலைவாய்ப்புகளை பொருத்தும் நிர்ணயிக்கப்படுகிறது. வேலைவாய்ப்பின்மை விகிதம் குறைய வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு மத்திய, மாநில அரசுகளும் போராடி வருகின்றது. வேலைவாய்ப்பின்மையை சாதகமாக பயன்படுத்தி ஒரு சில மோசடி நிறுவனங்கள் மக்களை ஏமாற்றுகின்றனர். இந்நிலையில், இதுகுறித்து தேசிய தகவல் மையம் (NIC) ஒரு முக்கிய எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
அதன்படி, இந்திய அரசின் தொழில்நுட்பக் குழுவாக இருக்கும் தேசிய தகவல் மையத்தின் பெயரில் வேலைவாய்ப்பு பற்றிய போலியான தகவல்கள் பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்த புகார் பெறப்பட்டதும், NIC உடனடியாக இதற்கான தடுப்பு நடவடிக்கைகளில் செயல்பட்டதாகவும், இது போன்ற செய்திகளை பெறும் போது பொதுமக்கள் [email protected] மற்றும் https://cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார்களை உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.