தமிழகத்தில் கொரோனா தினசரி பாதிப்பு உயர்வு – பள்ளிகளில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்!
ஈரோடு மாவட்டத்தில் அண்மைக்காலமாக கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதையடுத்து தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி காலை பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு காய்ச்சல் உள்ளதா? என்பது குறித்து உடல் வெப்ப பரிசோதனை செய்யப்படுகிறது என ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார்.
தினசரி பாதிப்பு உயர்வு:
தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு கடந்த ஜூன் 13ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் இயங்கி வருகிறது. இந்த நிலையில் மீண்டும் கொரோனா தொற்று வேகமெடுத்துள்ளது. இதையடுத்து பள்ளி கல்வித்துறை சார்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் மாணவ-மாணவிகள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஈரோடு மாவட்டத்தில் சமீப காலமாக கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதையடுத்து தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Exams Daily Mobile App Download
இதன் அடிப்படையில், பள்ளிக்கு வரும் மாணவர்கள் கண்டிப்பாக மாஸ்க் அணிந்து வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பள்ளிகளிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டு வருகிறது. அதன்படி காலை பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு காய்ச்சல் உள்ளதா? என்பது குறித்து உடல் வெப்ப பரிசோதனை செய்யப்படுகிறது. இதில் காய்ச்சல் போன்ற அறிகுறி உள்ள மாணவர்கள் பள்ளிக்குள் அனுமதிக்கப்படாமல் அவர்கள் அருகில் இருக்கும் மருத்துவமனை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
TNPSC தேர்வாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு – ‘இதனை’ உடனடியாக செய்ய அறிவுறுத்தல்!
இதேபோல் காய்ச்சல், சளி, இருமல் அறிகுறி உள்ள மாணவ-மாணவிகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என ஏற்கனவே பெற்றோருக்கு அறிவுறுத்தி உள்ளோம். மேலும் நமது மாவட்டத்தில் பள்ளி வகுப்பறைகளில் மாணவ-மாணவிகள் செல்போன்களை பயன்படுத்துவதாக இதுவரை எந்த ஒரு புகாரும் வரவில்லை. இருப்பினும் சோதனை செய்யும் போது செல்போன் கொண்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டால் பறிமுதல் செய்யப்படும் என்று ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.