மாநில அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – ஜூலை 1 முதல் அகவிலைப்படி (DA) உயர்வு!
தற்போது 7வது ஊதியக்குழுவின் கீழ் சம்பளம் பெறும் மாநில அரசு ஊழியர்களின் அகவிலைப்படி (DA) தொகையை 31% ஆக உயர்த்தி உத்தரகண்ட் அரசு அறிவித்துள்ளது. இந்த உயர்வு ஜூலை 1 முதல் அமலுக்கு வர இருக்கிறது.
அகவிலைப்படி உயர்வு
மத்திய அரசை தொடர்ந்து பல்வேறு மாநில அரசுகளும் தங்களது ஊழியர்களுக்கான அகவிலைப்படி (DA) தொகையை உயர்த்தி அறிவித்து வருகிறது. அந்த வகையில் தற்போது 7வது சம்பள ஊதியக்குழுவின் கீழ் ஊதியம் பெறும் உத்தரகண்ட் மாநில அரசு ஊழியர்களின் அகவிலைப்படி (DA) தொகையை 31% ஆக அரசு உயர்த்தியுள்ளது. இது குறித்த அறிவிப்பில், ‘ஏழாவது திருத்தப்பட்ட ஊதிய விகிதத்தில் அனுமதிக்கப்படும் மாநில அரசு ஊழியர்களுக்கு 2021 ஜூலை 1 முதல் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி தொகையை வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்த உயர்வின் மூலம் அரசு ஊழியர்களுக்கு 31 சதவீத அகவிலைப்படி வழங்கப்படும்’ என உத்தரகாண்ட் அரசு தெரிவித்துள்ளது. மேலும் இந்த அறிவிப்பின்படி, அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்த மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வால் சுமார் 2.5 லட்சம் மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுவோர் பயனடைய உள்ளனர். இதில் கவனிக்கத்தக்கது என்னவென்றால் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புஷ்கர் சிங் தாமி அரசு, மாநில இடைத்தேர்தலுக்கு முன்பாக ஊழியர்களை கவரும் வண்ணம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
இதற்கிடையில் லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஜூலை 2022 தவணைக்கான அகவிலைப்படி தொகையை வழங்க அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியான வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் இம்முறை அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வுத் தொகை 4% ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது. தற்போது வரை மத்திய அரசு ஊழியர்களுக்கு 34% அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. இப்போது ஜூலை 2022 தவணைக்கான DA 4% ஆக உயர்வடைந்தால் மொத்த அகவிலைப்படி தொகை 38% ஆக அதிகரிக்கும் என்று தகவல்கள் கூறுகிறது.