மத்திய அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் – மார்ச் மாதத்தில் DA உயர்வு!
மார்ச் மாத சம்பளத்துடன் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்திற்கான DA பணம் செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. DA உயர்வு குறித்த அறிவிப்பினால் மத்திய அரசின் ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அகவிலைப்படி உயர்வு:
மத்திய அரசின் ஊழியர்களுக்கு கடந்த 2021 ஜூலை தவணையின் படி 31% தற்போது வரை செலுத்தப்படுகிறது. ஜனவரி 1, 2022 தவணைக்கான அகவிலைப்படி உயர்வு 3% ஆக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டு வந்த நிலையில், இந்த உயர்வு பற்றிய அதிகாரப்பூர்வதகவல் ஏதும் வெளியாகவில்லை. அரசு 3 சதவிகிதம் அகவிலைப்படி உயர்த்தினாள் மொத்த அகவிலைப்படி (DA) 34% ஆக மாறும். இது ஜனவரி 1, 2022 முதல் நடைமுறைப்படுத்தப்படும், அதாவது ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கான அலவன்ஸ் மற்றும் மார்ச் மாத சம்பளத்தில் நிலுவைத் தொகையுடன் பணியாளர்கள் பெறலாம்.
மாநிலம் முழுவதும் இரவுநேர முழு ஊரடங்கு உத்தரவு மீண்டும் அமல்? அரசு முக்கிய அறிவிப்பு!
மார்ச் மாதத்தில் ஊழியர்களுக்கு முழு சம்பளம் வழங்கப்படும் என்றும், அதில் டிஏ நிலுவைத் தொகையும் அடங்கும் என்றும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த டிஏ நிலுவைத் தொகை ஜனவரி மற்றும் பிப்ரவரி மாத சம்பளத்துக்கானது ஆகும். ஒரு ஊழியரின் அடிப்படை சம்பளம் ரூ.18000 எனில், 34 சதவீதம் என்ற விகிதத்தில் ஒரு மாதத்திற்கு ரூ.6120 கிடைக்கும். இரண்டு மாதங்களுக்கு நிலுவைத் தொகையாக ரூ.12,240 மார்ச் மாத சம்பளத்தில் கூடுதல் டிஏ பாக்கி கிடைக்கும். இதேபோல், 56900 ரூபாய் அடிப்படை சம்பளத்தில் 34 சதவீதம் அகவிலைப்படி மாதம் 19346 ரூபாய் வழங்கப்படும். அதாவது இரண்டு மாத நிலுவைத் தொகை சுமார் 38,692 ரூபாய் ஆகும்.
தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் புதிய விதிமுறை – NOTA & விவி பேட் முறை நீக்கம்!
இதனால் மத்திய அரசின் ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த அறிவிப்பு ஹோலி பண்டிகைக்கு முன்னதாக வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல், மத்திய அரசின் ஊழியர்களுக்கு 2020 ஜனவரி முதல் 2021 ஜூன் வரையிலான 18 மாத DA நிலுவை தொகை வழங்கப்படாமல் உள்ளது. இது பற்றிய அறிவிப்பும் பட்ஜெட்டுக்கு முன்னதாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில், நிலுவை தொகை பற்றி எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால் ஊழியர்கள் தொடர்ந்து மத்திய அரசுக்கு தங்களது 18 மாத நிலுவை தொகையை செலுத்த கோரிக்கை வைத்து வருகின்றனர்.