மாநிலம் முழுவதும் இரவுநேர முழு ஊரடங்கு உத்தரவு மீண்டும் அமல்? அரசு முக்கிய அறிவிப்பு!
மாநிலம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்புகள் வீழ்ச்சியடைந்து வரும் நிலையில் ஒடிசா அரசாங்கம் இரவு ஊரடங்கு உத்தரவை நீக்குவதாக தெரிவித்துள்ளது. இந்த நடைமுறை நேற்று (பிப்.18) முதல் அமலுக்கு வந்துள்ளது.
ஊரடங்கு நீக்கம்
முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான ஒடிசா அரசு, மாநிலத்தில் விதிக்கப்பட்டிருந்த கொரோனா தடுப்பு வழிகாட்டுதல்களை ஒவ்வொன்றாக தளர்த்தி வருகிறது. அந்த வகையில் கொரோனா 3ம் அலைப்பரவல் காரணமாக கடைகள், மால்கள், வணிக வளாகங்கள், சந்தைகள், திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பொழுதுபோக்கு வளாகங்கள், கடற்கரைகள், ஆடிட்டோரியங்கள் ஆகியவற்றில் விதிக்கப்பட்டிருந்த அனைத்து விதமான கட்டுப்பாடுகளும் தற்போது நீக்கப்பட்டுள்ளது.
காரில் வந்து வாக்கினை பதிவு செய்த நடிகர் விஜய், களத்தில் மக்கள் இயக்கம் – ஓட்டு யாருக்கு?
அதே நேரத்தில் அனைத்து அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களும் கொரோனா நெறிமுறையை கடைபிடித்து மீண்டுமாக செயல்பட துவங்கியுள்ளன. இதற்கிடையில் ஒடிசா மாநிலத்தில் தற்போதுள்ள கொரோனா நோய்த்தொற்று நிலவரத்தை ஆய்வு செய்த அரசு இரவு ஊரடங்கு உத்தரவை நீக்குவதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக சிறப்பு நிவாரண ஆணையர் அலுவலகம் பிறப்பித்த உத்தரவில், ‘பிப்ரவரி 18 முதல் அமலுக்கு வரும் வகையில் மாநிலத்தின் அனைத்து நகர்ப்புறங்களிலும் இரவு ஊரடங்கு நீக்கப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் புதிய விதிமுறை – NOTA & விவி பேட் முறை நீக்கம்!
இதற்கு முன்னதாக புவனேஸ்வர், கட்டாக் மற்றும் பூரி உள்ளிட்ட மாநிலத்தின் அனைத்து நகர்ப்புறங்களிலும் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது. மேலும் அத்தியாவசியமற்ற பயணங்களுக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. இப்போது இம்மாநிலத்தில் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதால், ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்த அரசாங்கம் அனுமதி அளித்திருக்கிறது. இதற்கிடையில் ஒடிசாவில் நேற்று (பிப்.17) ஒரு நாளில் 671 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன.