மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு ஹாப்பி நியூஸ் – அகவிலைப்படி (DA) உயர்வு எப்போது?
மத்திய அரசு ஊழியர்களை உற்சாகப்படுத்தும் வகையில் இந்திய அரசாங்கம் ஜூலை மாத இறுதிக்குள் அகவிலைப்படி உயர்வை அறிவிக்கலாம் என்று தகவல் வந்துள்ளது. இது அவர்களின் சம்பளத்தில் பெரிய அதிகரிப்புக்கு வழிவகுக்கும் என்று அரசு ஊழியர்கள் கூறி வருகின்றனர்.
அகவிலைப்படி உயர்வு:
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி தொகையை உயர்த்தினால் ஒரு கோடிக்கும் அதிகமாக இருக்கும் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் மத்திய அரசில் பணிபுரிந்து ஓய்வு ஊதியம் பெறுபவர்கள் என பலரும் பலன் அடைவார்கள் என்று ஒரு சில செய்தி நிறுவனங்கள் கூறிவருகிறது. இந்த நிலையில் தற்போது டி ஏ தொகை உயர்த்தப்பட்டு உள்ளது. மேலும் இரண்டு மாதங்களுக்கு டி ஏ அரியர் தொகை போன்றவை மார்ச் மாத ஊதியத்துடன் சேர்த்து ஊழியர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
TNPSC Group 4 VAO தேர்விற்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – வெளியான சுவாரசிய தகவல்!
இந்த நிலையில் தற்போதைய நிலவரப்படி, 7 வது ஊதியக்குழுவின் பரிந்துரைப்படி மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 31 சதவீதத்தில் இருந்து 34 சதவீதமாக சமீபத்தில் உயர்த்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, 2022 ஜனவரி 1 முதல் நிலுவைத் தொகையை வழங்க மத்திய நிதியமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில் தற்போது குடும்ப பென்ஷன் தொடர்பான விதிமுறையும் மாற்றப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, சிசிஎஸ் பென்ஷன் 1972 விதி 54(11)ன் படி, கணவன்-மனைவி இருவரும் ஓய்வூதிய விதிகளின் கீழ் இருந்தால், இருவரும் இறந்த பிறகு அவர்களது இரண்டு குழந்தைகளுக்கும் குடும்ப பென்ஷன் கிடைக்கும். பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு உறுப்பினர்களில் ஒருவர் இறந்தால், மற்ற உறுப்பினருக்கு குடும்ப பென்ஷன் வழங்கப்படும். ஓய்வுக்குப் பின் இருவரும் இறந்து விட்டால், குழந்தைகளுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும்.
Exams Daily Mobile App Download
மேலும் இது தவிர, 7வது ஊதியக் குழுவின் படி, ஜூலை 2022ல் அகவிலைப்படி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனை தொடர்ந்து மார்ச் முதல் ஜூன் வரையிலான தரவுகளும் குறியீடும் பாதிக்கப்படும். மார்ச் முதல் ஜூன் வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டில் முன்னேற்றம் ஏற்பட்டால், மத்திய ஊழியர்களுக்கு மீண்டும் டிஏ குறித்த நல்ல செய்தி வரும். அதனை தொடர்ந்து குறியீடு கீழே சென்றால், டி ஏ அதிகரிக்காது என்றும் தெரிவித்து உள்ளனர்.