TNPSC Group 4 VAO தேர்விற்கு விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – வெளியான சுவாரசிய தகவல்!
குரூப் 4 தேர்வின் மூலமாக 7,382 காலிப்பணியிடங்களுக்கு 21,83,225 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த விண்ணப்பங்களில் பெரும்பாலானோர் பெண்களே விண்ணப்பித்துள்ளதாக TNPSC தேர்வாணையம் அறிவித்துள்ளது.
குரூப் 4:
தமிழக அரசு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் ஒவ்வொரு வருடமும் குரூப் 1, 2 மற்றும் குரூப் 4 முதலான தகுதி தேர்வுகளை நடத்தி தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றின் காரணமாக தகுதித் தேர்வுகள் எதுவும் நடத்தப்படவில்லை. குரூப்-2 தேர்வு குறித்தான அறிவிப்பு பிப்ரவரி மாதத்தில் வெளியானது மற்றும் மார்ச் 29 ஆம் தேதியில் குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியானது. மேலும், குரூப் -4 தேர்வின் மூலமாக கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஒ), டைப்பிஸ்ட், ஸ்டேனோ டைப்பிஸ்ட், இளநிலை உதவியாளர், பில் கலெக்டர், நில அளவையாளர் போன்ற பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
தமிழகத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரை ஆல்பாஸ், கோடை விடுமுறை – விரைவில் வெளியாகும் அறிவிப்பு?
குரூப் -4 தேர்வின் மூலமாக மொத்தமாக 7,382 பணியிடங்களை நிரப்பவுள்ளனர். இதில் 81 பணியிடங்கள் ஸ்போர்ட்ஸ் கோட்டா மூலம் நிரப்பப்படவுள்ளன. விஏஓ பணிக்கு 274 காலி பணியிடங்களும், ஜூனியர் அசிஸ்டென்ட் பணிக்கு 3681 காலி பணியிடங்களும், தட்டச்சர் பணிக்கு 2108 காலி பணியிடங்களும், சுருக்கெழுத்து தட்டச்சர் பணிக்கு 1024 காலி பணியிடங்களும், வீட்டு வசதி வாரியம் நகர்ப்புற வாழ்வில் மேம்பாட்டு வாரியம் ஜூனியர் அசிஸ்டென்ட் பில் கலெக்டர் சுருக்கெழுத்து தட்டச்சர் பணிக்கு 163 காலி பணியிடங்களும் உள்ளன.
Exams Daily Mobile App Download
குரூப்-4 தேர்வுக்கான எழுத்துத் தேர்வு ஜூலை 24ஆம் தேதி நடைபெற இருக்கிறது. மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு குரூப்-4 தேர்வுக்கான விண்ணப்பங்கள் வெளியிட்ட நிலையில் 21,83,225 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. ஒரு பணியிடத்திற்கு மட்டுமே சுமார் 300 பேர் போட்டிபோடவுள்ளனர். குரூப் 4 தேர்விற்கு ஆண்களை விட பெண்கள் தான் அதிகமாக விண்ணப்பித்துள்ளதாக தேர்வாணையம் அறிவித்துள்ளது. அதாவது, 12.58 லட்சம் பெண்கள் குரூப் 4 தேர்விற்கு விண்ணப்பித்துள்ளனர் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களிடம் இருந்து 129 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.