தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம் – மாலை நேர போராட்டம்!
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி ஊழியர்கள் சங்கம் சார்பில் மாலை நேர தர்ணா போராட்டம் நடைபெற்றது.
தர்ணா போராட்டம்:
தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்படும், மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் சட்டமன்ற தேர்தலின் போது வாக்குறுதி அளித்தார். அதன்படி ஆட்சிக்கு வந்தவுடன் அகவிலைப்படி 17 சதவீதத்தில் இருந்து 31% ஆக உயர்த்தி அளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து வாக்குறுதி அளித்தபடி மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். கடந்த 2003ம் ஆண்டு அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்பட்டது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாதத்தில் அகவிலைப்படி (DA) உயர்வு? முழு விவரம் இதோ!
இந்த திட்டத்தில் பணி காலத்திற்கு பிறகு பணப்பலன்களை ஊழியர்கள் பெற முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் எதிர்கால பலன்களை பெற முடியதாக சூழல் உருவானது. அதனால் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இதனை அமல்படுத்த கோரி பல்வேறு போராட்டங்களும் நடைபெற்றது. முதல்வர் ஆட்சிக்கு வந்து ஓராண்டாகியும் இன்னுமும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படவில்லை என்று அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
Exams Daily Mobile App Download
மேலும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி தர்ணா போராட்டம் நடத்தப்படும் என்று ஊழியர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர். அதன்படி 3% அகவிலைப்படி உயர்வை ரொக்கமாக வழங்க வேண்டும். அதே போல புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாலை நேர தர்ணா போராட்டம் நடைபெற்றது.