PM KISAN திட்டத்தில் இணைந்துள்ள விவசாயிகள் கவனத்திற்கு – eKYC செயல்முறையை முடிக்க மே 31 கடைசி நாள்!
PM கிசான் திட்டத்தின் கீழ் ஏழை விவசாயிகளுக்கு மே இறுதிக்குள் அல்லது ஜூன் மாத தொடக்கத்திற்குள் 11 ஆவது தவணை நிதியுதவி கிடைக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் eKYC செயல்முறையை முடிக்க மே 31 தான் கடைசி நாள் என்பதால் விரைவில் முடிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
PM கிசான் திட்டம்:
இந்தியாவில் உள்ள ஏழை விவசாயிகள் மத்திய அரசால் தொடங்கப்பட்ட பிரதம மந்திரி விவசாயிகள் நிதியுதவி திட்டம் (PM Kisan Samman Nidhi Yojana) என்கிற திட்டத்தின் மூலமாக நிதியுதவி பெற்று வருகின்றனர். இந்த PM Kisan திட்டத்தின் மூலமாக நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2000 வழங்கப்படுகிறது. ஒரு ஆண்டிற்கு மட்டுமே ஏழை விவசாயிகள் இந்த திட்டத்தின் மூலமாக ரூ.6000 வரைக்கும் நிதியுதவி பெற்று வருகின்றனர். இதுவரை விவசாயிகள் இந்த திட்டத்தின் கீழ் 10 தவணைகளில் நிதியுதவி பெற்றுள்ளனர். இந்த தவணை கடந்த ஆண்டு மே மாதம் 15 ஆம் தேதி அன்று வெளியிடப்பட்டது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம் – மாலை நேர போராட்டம்!
பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதியின் 11வது தவணைகளாக விவசாயிகள் காத்துக் கொண்டிருக்கின்றனர். முதலில் மே 31 ஆம் தேதியில் பிரதமர் கிசான் சம்மன் நிதியின் 11வது தவணை கிடைக்க வாய்ப்புள்ளதாக அறிவித்திருந்தனர். தற்போது மே அல்லது ஜூன் மாதத்திற்குள் 11 ஆவது தவணை கிடைக்க வாய்ப்புள்ளதாக அறிவித்துள்ளனர். விவசாயிகள் 11 ஆவது தவணையை பெற eKYC செயல்முறையை முடிப்பது மிகவும் அவசியமாகும். PM கிசான் கணக்கின் eKYC செயல்முறையை முடிக்க மே 31 தான் கடைசி தேதி என்பதால் விரைவில் செய்து முடிக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
PM Kisan கணக்கின் eKYC செயல்முறையை எவ்வாறு செய்து முடிப்பது என்பதை பார்க்கலாம். முதலில் https://pmkisan.gov.in/ என்கிற இணையதள முகவரிக்கு சென்று Farmers Corner பிரிவில் eKYC என்கிற பகுதியை கிளிக் செய்யவும். அதில் e-KYC ன் விருப்பத்தை கிளிக் செய்து ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும். பின்பு, ஆதார் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP வரும். அந்த OTP எண்ணையும் பதிவு செய்து வெற்றிகரமாக சமர்ப்பிக்கவும் என்கிற பகுதியை கிளிக் செய்து விட்டால் e-KYC செயல்முறையை முடித்து விடலாம்.